ரஃபேல் ஊழல் - நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
Recommended Video
டெல்லி: ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் ஊழல் குறித்து உடனே விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு செய்த மனுக்கள் இன்று உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனையடுத்து நாட்டு மக்களிடம் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், ரஃபேல் போர் விமானங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பானது விரிவான விசாரணைக்கு வழி வகுத்துள்ளது.
Justice Joseph of the Supreme Court has opened a huge door into investigation of the RAFALE scam.
— Rahul Gandhi (@RahulGandhi) November 14, 2019
An investigation must now begin in full earnest. A Joint Parliamentary Committee (JPC) must also be set up to probe this scam. #BJPLiesOnRafale pic.twitter.com/JsqZ53kZFP
ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் ஊழல் குறித்து உடனே விசாரிக்க வேண்டும். இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலு தமது ட்விட்டர் பக்கத்தில் நீதிபதி ஜோசப் அளித்த தீர்ப்பின் நகல்களின் முக்கிய பகுதிகளை கோடிட்டுக் காட்டியும் பதிவேற்றியுள்ளார் ராகுல் காந்தி.