காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் காந்தியே தொடருவார்.. ஆனால் ஒரு நிபந்தனையாம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
காங்கிரஸ் கட்சிக்கு ராகுலின் தலைமையே தொடர்ந்து தேவை.
டெல்லி: ராகுல் காந்தியின் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு இன்னும் மூன்று, நான்கு மாதங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றி பெற்றது. எனவே, அதன் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளார் ராகுல் காந்தி. ஆனால், அவரது ராஜினாமா முடிவை கட்சி ஏற்க மறுத்துவிட்டது.

அதேநேரம், ராகுல் காந்தி தனது முடிவில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். இந்த நிலையில், இன்னும் மூன்று நான்கு மாதங்களுக்கு ராகுல் காந்தி தலைவர் பதவியிலேயே தொடருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுவரை, புதிய தலைவருக்கான தேடுதல் வேட்டையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபடப்போகிறார்களாம். லோக்சபா ரிசல்ட் அமளி, துமளிகள் ஓய்ந்த பிறகு, புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications