"ரபேல் கோப்புகளை காட்டி மோடியை மிரட்டும் பாரிக்கர்".. அடுத்தடுத்து ராகுல் அதிரடி
Recommended Video

டெல்லி: ரபேல் ஒப்பந்த கோப்புகளை வைத்து கொண்டு கோவா முதல்வரும் முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கர் , பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி வருவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து நேற்று காரசாரமான விவாதம் நடந்தது. இதில் ராகுல் காந்தி பாயிண்ட் பாயிண்ட்டாக கேள்விகளை கேட்டு அனைவரையும் திக்குமுக்காட வைத்துவிட்டார்.
20 நிமிடங்கள் ரபேல் குறித்து ராகுல் பேசிய போது, ரபேல் குறித்து பிரதமருடன் நேருக்கு நேர் விவாதிக்க விரும்புகிறேன். அருண் ஜேட்லி லோக்சபாவில் பேசியபோது காங்கிரஸ் கட்சியினர் 1600 கோடி குறித்தே பேசி வருகின்றனர். இது ரூ. 58,000 கோடி ஒபபந்தம் என்று கூறியுள்ளார். நீங்கள் ரூ. 58 ஆயிரம் கோடியை 36-ஆல் வகுத்தால் என்ன கிடைக்கும். எனவே இது ரூ.1600 கோடி என மோடி அரசுதான் சொல்கிறது.

ராணேவிடம்
கோவா அமைச்சர் விஸ்வஜித் ராணே மற்றொருவருடன் பேசுவது போல் ஒரு ஆடியோ பதிவு என்னிடம் உள்ளது. அதில் கடந்த வாரம் கோவா சட்டசபை கூட்டத்தில் ராணே கூறுகையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து கோப்புகளையும் தான் தங்கியுள்ள பிளாட்டில் படுக்கை அறையில் வைத்துள்ளதாக பாரிக்கர் தெரிவித்துள்ளதாக ராணே மற்றொருவரிடம் கூறியுள்ளார்.

பரபரப்பு
ரபேல் விவகாரம் குறித்த கோப்புகளை தன் படுக்கை அறையில் வைத்துள்ள பாரிக்கர் பணம் கேட்டு பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி வருகிறார் என ராகுல் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
|
மறுப்பு
அதிலும் ரபேல் விமான ஒப்பந்தத்தை விட இது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறிவிட்டது. அந்த ஆடியோவை பிளே செய்ய ராகுல், சபாநாயகரிடம் அனுமதி கோரியதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
|
விமானம்
ராகுலின் குற்றச்சாட்டு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் தலைமையிலான அரசிடம் கூட விமானங்களுக்கு இருவேறு விலைகள் வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பயணம் செய்யும் விமானங்களுக்கு ஒரு விலையும் போரில் ஈடுபடும் விமானங்களுக்கு ஒரு விலையும் இருக்கும். இரு ரக விமானங்களையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு பின்னர் ரபேல் ஒப்பந்தத்தில் மோசடி நடந்துள்ளது என கூறுமாறு அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications