Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜன. 26-ல் டெல்லி விவசாயிகள் பேரணி... பொய் செய்தி.. ராஜ்தீப் சர்தேசாய் மீது ஒழுங்கு நடவடிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஜனவரி 26-ந் தேதி விசாயிகள் - போலீசார் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக பொய்யான தகவலை ட்வீட் செய்ததால் இந்தியா டுடே குழுமத்தால் அதன் சீனியர் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 26-ந் தேதி தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை போட்டிருந்தார் ராஜ்தீப் சர்தேசாய். அதில் 46 வயது விவசாயி நவ்நீத் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்; உயிர் தியாகம் வீணாகாது என என்னிடம் விவசாயிகள் கூறினர் என கூறியிருந்தார்.

Rajdeep Sardesai taken off air for two weeks

இந்த ட்விட்டர் பதிவை பின்னர் ராஜ்தீப் சர்தேசாய் நீக்கிவிட்டார். மேலும் டெல்லி போலீசார், விவசாயி நவ்நீத் டிராக்டரை வேகமாக ஓட்டி வந்து போலீஸ் தடுப்பு மீது மோதி தலைகுப்புற டிராக்டர் கவிழும் வீடியோவை வெளியிட்டனர்.

ராஜ்தீப் சர்தேசாயின் இந்த ட்விட்டர் பதிவு பெரும் சர்ச்சையாகவும் வெடித்தது. தற்போது இந்தியா டுடே குழுமம், ராஜ்தீப் சர்தேசாய் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ராஜ்தீப் சர்தேசாய் பணிக்கு வரலாம்; ஆனால் 2 வார காலத்துக்கு டிவி நிகழ்ச்சிகளை நடத்த கூடாது என்கிற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+