ராஜ்தானி ரயில் மோதி.. உடல் சிதறி பலியான 8 யானைகள்! அசாமில் அதிர்ச்சி
டெல்லி: அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை, சாய்ரங்-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானை கூட்டம் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் எட்டு யானைகள் உயிரிழந்தன. ரயிலின் எஞ்சின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ஒரு யானைக்குட்டி மட்டும் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

என்ன நடந்தது?
மிசோரமின் சாய்ரங்கில் இருந்து, டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலை நோக்கி, நேற்றிரவு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் கவுகாத்தியிலிருந்து, சுமார் 126 கி.மீ தூரத்தில் வந்துக்கொண்டிருந்தபோது, அதிகாலை 2.17 மணியளவில், தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை கூட்டத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் சில யானைகள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டன. ஓரிரு யானைகள் ரயிலின் அடியில் சிக்கியது. இப்படியாக மொத்தம் 8 யானைகள் பலியாகின.
விபத்தும் மீட்பும்
விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன், ரயில்வே துறையினர் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். யானை மீது மோதிய வேகத்தில் ரயிலின் என்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை. சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் 8 யானைகள் உயிரிழந்திருக்கிறது என்பதை வனத்துறையினர் உறுதி செய்திருக்கின்றனர். யானைகளின் உடல் பாகங்கள் தண்டவாளங்களில் சிதறியுள்ளது. அதை அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் வடகிழக்கு பகுதிக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.
முதற்கட்ட விசாரணை
இந்த விபத்து தொடர்பாக வனத்துறை மற்றும் ரயில்வே துறை விசாரணையை தொடங்கியுள்ளது. ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தில் யானைகளை பார்த்தவுடன் உடனடியாக அவசர பிரேக்குகளை பயன்படுத்தியிருக்கிறார். இருப்பினும் ரயில் மோதிய வேகத்தில் யானைகள் உயிரிழந்திருக்கின்றன என ரயில்வேதுறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications