ராஜ்தானி ரயில் மோதி.. உடல் சிதறி பலியான 8 யானைகள்! அசாமில் அதிர்ச்சி
டெல்லி: அசாமின் ஹோஜாய் மாவட்டத்தில் இன்று அதிகாலை, சாய்ரங்-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் யானை கூட்டம் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் எட்டு யானைகள் உயிரிழந்தன. ரயிலின் எஞ்சின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் ஒரு யானைக்குட்டி மட்டும் காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் ரயில் மோதி யானைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.

என்ன நடந்தது?
மிசோரமின் சாய்ரங்கில் இருந்து, டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலை நோக்கி, நேற்றிரவு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் கவுகாத்தியிலிருந்து, சுமார் 126 கி.மீ தூரத்தில் வந்துக்கொண்டிருந்தபோது, அதிகாலை 2.17 மணியளவில், தண்டவாளத்தை கடக்க முயன்ற யானை கூட்டத்தின் மீது மோதியது. மோதிய வேகத்தில் சில யானைகள் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டன. ஓரிரு யானைகள் ரயிலின் அடியில் சிக்கியது. இப்படியாக மொத்தம் 8 யானைகள் பலியாகின.
விபத்தும் மீட்பும்
விபத்து குறித்த தகவல் அறிந்தவுடன், ரயில்வே துறையினர் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். யானை மீது மோதிய வேகத்தில் ரயிலின் என்ஜின் மற்றும் 5 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் யாரும் உயிரிழக்கவில்லை. சிலருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டிருக்கிறது. விபத்தில் 8 யானைகள் உயிரிழந்திருக்கிறது என்பதை வனத்துறையினர் உறுதி செய்திருக்கின்றனர். யானைகளின் உடல் பாகங்கள் தண்டவாளங்களில் சிதறியுள்ளது. அதை அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டிருக்கின்றனர். இதனால் வடகிழக்கு பகுதிக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டிருக்கிறது.
முதற்கட்ட விசாரணை
இந்த விபத்து தொடர்பாக வனத்துறை மற்றும் ரயில்வே துறை விசாரணையை தொடங்கியுள்ளது. ரயில் ஓட்டுநர் தண்டவாளத்தில் யானைகளை பார்த்தவுடன் உடனடியாக அவசர பிரேக்குகளை பயன்படுத்தியிருக்கிறார். இருப்பினும் ரயில் மோதிய வேகத்தில் யானைகள் உயிரிழந்திருக்கின்றன என ரயில்வேதுறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications