ராஜீவ் கொலை: சிபிஐ-ன் சதி விசாரணைக்கும் 7 தமிழருக்கும் தொடர்பே இல்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழு நடத்தும் விசாரணைக்கும் தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழருக்கும் எந்த தொடர்புமே இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தமக்கான தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்து வருகிறார்.

சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழு நடத்தி வரும் விசாரணை அறிக்கைக்காக தாம் காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியதாவது:
பல்நோக்கு கண்காணிப்பு குழுவானது 20 ஆண்டுகளாக ராஜீவ் கொலையின் பின்னால் இருக்கும் ஒரு பெரிய சதித் திட்டம் குறித்து விசாரித்து வருகிறது. இன்னனும் வெளிநாடுகளில் இருந்து பதில் கடிதங்களை இந்த குழு பெற்று வருகிறது.
இந்த சதி விசாரணை என்பதே வேறு யாருக்கு எல்லாம் இந்த படுகொலையில் தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பானதுதான். ஏற்கனவே இந்த வழக்கில் தண்டனையை அனுபவித்து கொண்டிருப்பவர்கள் தொடர்பானது அல்ல என சுட்டிக்காட்டி இருக்கிறது.
ஏற்கனவே பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணையில் புதிய தகவல் எதுவும் இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. அதனால், பேரறிவாளன் வாங்கி கொடுத்த பேட்டரியில்தான் பெல்ட் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க புதிய ஆதாரம் இல்லை எனவும் இந்த குழு உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications