ராஜீவ் கொலை: சிபிஐ-ன் சதி விசாரணைக்கும் 7 தமிழருக்கும் தொடர்பே இல்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
டெல்லி: ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழு நடத்தும் விசாரணைக்கும் தண்டனையை அனுபவித்து வரும் 7 தமிழருக்கும் எந்த தொடர்புமே இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தமக்கான தண்டனையை நிறுத்தி வைக்க கோரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில், 7 தமிழரை விடுதலை செய்யும் தமிழக அரசின் பரிந்துரை மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்து வருகிறார்.

சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழு நடத்தி வரும் விசாரணை அறிக்கைக்காக தாம் காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியதாவது:
பல்நோக்கு கண்காணிப்பு குழுவானது 20 ஆண்டுகளாக ராஜீவ் கொலையின் பின்னால் இருக்கும் ஒரு பெரிய சதித் திட்டம் குறித்து விசாரித்து வருகிறது. இன்னனும் வெளிநாடுகளில் இருந்து பதில் கடிதங்களை இந்த குழு பெற்று வருகிறது.
இந்த சதி விசாரணை என்பதே வேறு யாருக்கு எல்லாம் இந்த படுகொலையில் தொடர்பு இருக்கிறது என்பது தொடர்பானதுதான். ஏற்கனவே இந்த வழக்கில் தண்டனையை அனுபவித்து கொண்டிருப்பவர்கள் தொடர்பானது அல்ல என சுட்டிக்காட்டி இருக்கிறது.
ஏற்கனவே பல்நோக்கு கண்காணிப்பு குழுவின் விசாரணையில் புதிய தகவல் எதுவும் இல்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. அதனால், பேரறிவாளன் வாங்கி கொடுத்த பேட்டரியில்தான் பெல்ட் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்பதை நிரூபிக்க புதிய ஆதாரம் இல்லை எனவும் இந்த குழு உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications