மோடி அரசின் நம்பர் 2 யார் என்று நீடிக்கும் போட்டி.! மத்திய அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டிய ராஜ்நாத்
Recommended Video
டெல்லி: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங் நேற்று மத்திய அமைச்சர்கள் சிலரை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத கூட்டமாக நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவிலும், மற்ற அமைச்சரவை குழுக்களிலும் ராஜ்நாத் சிங் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த அதிகாரப்பூர்வமற்ற மத்திய அமைச்சர்களின் கூட்டத்தை அவர் நடத்தியுள்ளார்.

முன்னதாக பிரதமர் மோடி அமைச்சரவை குழுக்களை மூன்று நாட்களுக்கு முன் மாற்றியமைத்தார். இதில் உள்துறை அமைச்சரான அமித்ஷா கிட்டத்தட்ட 8 அமைச்சரவை குழுக்களில் இடம் பெற்றிருந்தார். ஆனால் பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்நாத் சிங்கிற்கு, இரு அமைச்சரவை குழுக்களில் மட்டுமே இடமளிக்கப்பட்டிருந்தது.
பிரதமருக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடிப்பது யார் என்ற போட்டி அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் இடையே நிலவி வந்ததாக கூறப்பட்ட நிலையில், இதில் அதிக அமைச்சரவை குழுக்களில் அமித் ஷாவிற்கு இடமளிக்கப்பட்டதால் ராஜ்நாத் சிங் கடும் அதிருப்தியடைந்தார்.
இதனால் அமித் ஷா தான் மோடி அரசில் நம்பர் 2 என்று சொல்லாமல் சொல்லப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இது தன்னை அவமதிக்கும் செயலாகும் என ராஜ்நாத் சிங் கடும் ஆத்திரமடைந்தததாக கூறப்பட்டது.
ஒருகட்டத்தில் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, ராஜ்நாத் ஆதங்கம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால் இத்தகவலை பாதுகாப்பு துறை அமைச்சகம் மறுத்தது. எனினும் இதனையறிந்த மோடி, ராஜ்நாத்தை சமாதானப்படுத்த அவரையும் மத்திய அமைச்சரவை குழுக்களில் இணைத்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
இதனையடுத்து மோடி மீண்டும் அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்தார். இதன் பின்னர் மொத்தம் 6 அமைச்சரவை குழுக்களில், ராஜ்நாத் சிங் இடம் பிடித்தார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறைகளின் அமைச்சரவை குழுக்களில் மட்டுமின்றி, கூடுதலாக பொருளாதார வளர்ச்சி, முதலீடு, வேலை வாய்ப்பு, மற்றும் திறன் வளர்ப்பு உள்ளிட்ட 4 அமைச்சரவைகளுக்கான துணை குழுக்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் ராஜ்நாத் சிங் பெயர் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில் அதிகாரப்பூர்வமற்ற மத்திய அமைச்சர்கள் கூட்டத்திற்கு ராஜ்நாத் சிங் நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் விரைவில் கூட உள்ள நாடாளுமன்ற கூட்டத்தில் பின்பற்றப்பட வேண்டிய உத்திகள் மற்றும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இரண்டாவது முறையாக மோடி பதவியேற்ற பிறகு இத்தகைய மத்திய அமைச்சர் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதலாவது நபர் ராஜ்நாத் சிங் ஆவார். ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்திருந்த இந்த அதிகாரப்பூர்வமற்ற அமைச்சர்கள் கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications