ராஜ்நாத் சிங் டிஸ்சார்ஜ்.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.. என்ன பிரச்சனை?
டெல்லி: கடந்த 2 நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் தான் அவர் எதற்காக மருத்துவமனையில் 2 நாள் சிகிச்சை பெற்றார்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜ்நாத் சிங். இந்நிலையில் தான் கடந்த 11ம் தேதி ராஜ்நாத் சிங் திடீரென்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜ்நாத் சிங்கிற்கு நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் கீழ் செயல்படும் பழைய தனியார் வார்டில் வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் தான் 2 நாள் சிகிச்சைக்கு பிறகு ராஜ்நாத் சிங் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் எதற்காக 2 நாட்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ராஜ்நாத் சிங்கிற்கு கடும் முதுகு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு 2 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று மதியம் வீடு திரும்பி உள்ளார்.
இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஊடகப்பிரிவு பொறுப்பாளரான டாக்டர் ரிமா தாதா கூறுகையில், ‛‛ ராஜ்நாத் சிங் முதுகுவலிக்கு சிகிச்சை பெற்றார். இன்று மதியம் 2 மணிக்கு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்'' என தெரிவித்துள்ளார். இதனால் ராஜ்நாத் சிங்கின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு!











Click it and Unblock the Notifications