இந்தியாவுடன் இணைய போராடப் போகும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள்: ராஜ்நாத்சிங்
டெல்லி: ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைவதற்காக விரைவில் கோரிக்கைகளை முன்வைத்து போராடுவார்கள் என்று பாதுகாப்புத் துறை அமைச்ச ராஜ்நாத்சிங் கூறியுளாள்ர்.
கொரோனா லாக்டவுன் காலம் என்பதால் நாடு முழுவதும் பாஜகவினரிடையே அக்கட்சித் தலைவர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசி வருகின்றனர். ஒடிஷா, மேற்கு வங்கத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

இதேபோல் மகாராஷ்டிரா பாஜகவினர் மத்தியில் ராஜ்நாத்சிங் ஏற்கனவே பேசியிருந்தார். தற்போது ஜம்மு காஷ்மீர் பாஜக தொண்டர்களிடையே ராஜ்நாத்சிங் பேசியதாவது:
தேசத்தின் கவுரவத்தை எந்த ஒரு சூழ்நிலையிலும் மத்திய அரசு விட்டுக் கொடுக்காது என்பதை எதிர்க்கட்சியினருக்கு தெரிவிக்க விரும்புகிறோம். சீனாவுடன் ராணுவம் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை தீர்க்க சீனாவும் கூட விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்த விவரங்கள் அனைத்துமே நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வாழும் மக்கள் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்து விரைவில் கோரிக்கை வைப்பார்கள். பாகிஸ்தான் ஆட்சியை நிராகரித்து இந்தியாவுடன் சேருகிறோம் என்று ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் முழக்கமிடுவார்கள்.
அதற்கான காலம் வரும். அப்போது ஜம்மு காஷ்மீரின் நிலைமையே மாறும். வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா என்கிற நிலை விரைவில் மாறும். வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா ஏற்றுமதியில் முன்னணி வகிக்கும் நாடு என்ற பெருமையை பெற வேண்டும். இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications