பாங்கோங் ஏரி பக்கம்தான் படைகள் வாபஸ்.. பிங்கர் 6-ல் சீன ராணுவம் நிற்கிறது.. ராஜ்நாத் சிங் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சீனப் படைகள், பிங்கர் 8 உள்ளிட்ட சில பகுதிகளில் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டிருக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கிழக்கு லடாக்கின் பல பகுதிகளில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. அதை இந்திய ராணுவம் தடுத்தது. இதையடுத்து, இரு நாட்டு ராணுவ வீரர்களும் பல மாதங்களாக அங்கேயே குவிக்கப்பட்டுள்ளனர்.

Rajnath Singh says, China will keep its troops to the east of the Finger 8

இதனால் தொடர்ந்து பதட்டம் நிலவியது. இந்த நிலையில் ராணுவ மட்டத்தில் 9 சுற்று பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இதன் பிறகு பாங்கோங் ஏரி பகுதியில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள சம்மதித்துள்ளது. இதை ராஜ்யசபாவில் இன்று, ராஜ்நாத் சிங் உறுதிப்படுத்தினார்.

அதேநேரம், பாங்கோங் ஏரியின் வடக்கில் உள்ள பிங்கர் 6 பகுதியில் சீன ராணுவம் தொடர்ந்து நிற்கும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார். அதே போல, பிங்கர் 3 பகுதியில் இந்தியா தனது நிரந்தர தளத்தில் தொடர்ந்து ராணுவத்தை நிலை நிறுத்தும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இரு தரப்புக்கும் பரஸ்பரம் ஒப்பந்தம் ஏற்படும் வரை, இணைந்த ரோந்துப் பணிகள் நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+