"உங்க நாடு சுக்கு நூறாக சிதறும்.." வாயை விட்ட பாகிஸ்தானுக்கு அவர்கள் மொழியிலேயே ராஜ்நாத் சிங் பதிலடி
டெல்லி: கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் என்பது போலப் பாகிஸ்தான் மிரட்டல் விடுத்திருந்த சூழலில், அதற்கு நமது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். இந்தியா மீது கை வைத்தால் பாகிஸ்தான் சுக்கு நூறாகப் போய்விடும் என அவர் எச்சரித்துள்ளார். மேலும், வங்கதேசம் சுதந்திரம் பெற்ற வரலாற்றையும் அவர் நினைவு கூர்ந்தார்.
தேவையே இல்லாமல் இந்தியா பற்றிப் பேசி சர்ச்சையை ஏற்படுத்துவதைப் பாகிஸ்தான் வாடிக்கையாக வைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், தொடர்ந்து இந்தியா குறித்து சர்ச்சையைக் கிளப்பி வருகிறார். சமீபத்தில் கூட எதிர்காலத்தில் எதாவது மோதல் ஏற்பட்டால் கொல்கத்தாவைத் தாக்குவோம் என வாயை விட்டு இருந்தார்.

ராஜ்நாத் சிங்
இதற்கிடையே பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். 50 ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்த (வங்கதேச சுதந்திரத்தைச் சொல்கிறார்) வரலாற்றைச் சுட்டிக்காட்டிய ராஜ்நாத் சிங், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் எந்த அறிக்கையையும் வெளியிட வேண்டாம் என்று பாகிஸ்தானை அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் இது போன்ற கருத்துகளைச் சொல்லி இருக்கக்கூடாது. 55 ஆண்டுகளுக்கு முன்பு, பாகிஸ்தான் இரண்டாகப் பிரிந்தபோது அவர்கள் அதன் விளைவுகளை அனுபவித்தனர். மீண்டும் எங்கள் மண் மீது எதாவது செய்ய அவர்கள் முயன்றால், இந்த முறை பாகிஸ்தான் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்படும் என்பது கடவுளுக்கே தெரியும்" என்றும் அவர் நேரடியாக எச்சரித்தார்.
பதிலடி
பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா தேவையில்லாமல் இந்தியா பற்றிப் பேசி, கொல்கத்தா மீது தாக்குதல் நடத்துவோம் எனக் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலடியாகவே ராஜ்நாத் சிங் இந்த கருத்துகளைக் கூறியுள்ளார். எதிர்காலத்தில் இந்தியா தாக்குதல் நடத்தினால் பாகிஸ்தான் கடுமையான பதிலடி கொடுக்கும் என்று ஆசிப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வாயை விட்ட பாகிஸ்தான்
கடந்த சனிக்கிழமை சியால்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய கவாஜா ஆசிப், எதிர்காலத்தில் இந்தியா எதாவது பதற்றத்தை ஏற்படுத்தினால் பதற்றத்திற்கும் பாகிஸ்தான் வலுவான பதிலடி கொடுக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும், கொல்கத்தா மீதும் தாக்குதல் நடத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்தியா மீது அவர் ஆதாரமே இல்லாத சில தகவல்களையும் குறிப்பிட்டார்.
அதாவது இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கைதிகளை வைத்து போலியாகப் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது போல ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொண்டு, அதை வைத்து இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை ஆரம்பிக்கலாம் என அவர் கூறியிருந்தார். இதை எல்லாம் பாகிஸ்தான் தான் செய்யும். ஆனால், அவர் இந்தியா மீது குற்றஞ்சாட்டினார். இப்படி வாய்க்கு வந்ததைப் பேசினாலும் அவர் அதற்கான ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கவில்லை.
பஹல்காம் மோதல்
கடந்தாண்டு பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தானின் உள்ளே சென்று தீவிரவாத முகாம்களை அழித்தது. இதைப் பொறுக்காமல் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுத்தோம். இதனால் வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் சரணடைய ஓடி வந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் உட்பட.. 3 நாட்டு தலைவர்களுடன் பேசிய ஜெய்சங்கர்.. திடீரென நள்ளிரவில் பறந்த அழைப்பு! -
ஈரான் போரால் பாகிஸ்தானுக்கு பேரிடி.. இப்படி நடக்கும்னு எதிர்பார்த்து இருக்கவே மாட்டாங்கே.. போச்சே -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார்












Click it and Unblock the Notifications