தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு மார்ச் 26-ல் தேர்தல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ந் தேதி முடிவடைகிறது. இதில் தமிழகத்தில் திருச்சி சிவா (திமுக), சசிகலா புஷ்பா (தற்போது பாஜக), விஜிலா சத்தியானந்த், முத்துகருப்பன், ஏ.கே.செல்வராஜ் (அதிமுக), ரங்கராஜன் (சிபிஎம்) ஆகியோரது பதவி காலமும் முடிவடைகிறது.

Rajya Sabha election in TN to be held on March 26

இதையடுத்து 55 எம்.பி.க்கள் காலி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26-ந் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்காக வேட்புமனுத் தாக்கல் மார்ச் 6-ல் தொடங்குகிறது.

வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய மார்ச் 13-ந் தேதி கடைசிநாள். இதில் போட்டி இருந்தால் மார்ச் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் திமுக, அதிமுகவுக்கு தலா 3 ராஜ்யசபா எம்.பி. இடங்கள் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+