மேகதாது, ரபேல் விவகாரம்... தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
டெல்லி: மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ரபேல் விவகாரம், மேகதாது அணை விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் திங்கட்கிழமை மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று காலை மீண்டும் கூட்டம் கூடியது.

எதிர்க்கட்சிகள் அமளி
காலை 11 மணிக்கு அவை கூடியதும் மக்களவையில் ரபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதே போல், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அதிமுக எம் பிக்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து, அவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மாநிலங்களவை ஒத்திவைப்பு
இதேபோல் மாநிலங்களவையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மற்ற கட்சிகளின் எம்பிக்களும் தங்களது மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை எழுப்பினர். உறுப்பினர்களின் அமளி அதிகரித்து கொண்டு இருந்ததால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
|
கர்நாடகா எம்.பி-க்கள் போராட்டம்
இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக எம்.பி.க்கள் மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் கைகளில் பதாகைகள் ஏந்தியபடி, மேகதாது திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

போட்டி போராட்டம்
மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது, கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள், திட்டத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications