குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வருகிறது என நாங்க சொல்லவே இல்லையே... மோடிக்கு ராகேஷ் திகாயத் பதில்
டெல்லி: விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வரும் என நாங்கள் எப்போதும் சொல்லவே இல்லை என்று டெல்லியில் போராடும் விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவராக ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் இன்று ஜனாதிபதி உரை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, விவசாய விளைபொருட்களுகான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். மண்டிகள் முறை நீடிக்கும்.

டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் மோடி. இதற்கு ராகேஷ் திகாயத் அளித்துள்ள பதில்:
குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வரும் என்று நாங்கள் சொல்லவே இல்லை. எங்களைப் பொறுத்தவரை குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் தேவை என்கிறோம்.
டெல்லியில் விவசாயிகள் நடத்துகிற போராட்டத்தை முதலில் பஞ்சாப் மாநிலத்தவரின் போராட்டம் என்றார்கள். பின்னர் ஜாட் ஜாதியினர் போராட்டம், சீக்கியர் போராட்டம் என முத்திரை குத்தினர். இது விவசாயிகள் போராட்டம். நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகளின் போராட்டம் இது.
பிரதமர் மோடி சொல்வது போல மத்திய அரசு விவாதிக்க, பேச்சுவார்த்தை நடத்த அழைத்தால் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். விவசாயிகள் குழுவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தலாம். இவ்வாறு ராகேஷ் திகாயத் கூறினார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications