Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராம நவமி நாள் வகுப்புவாத மோதல்கள் குறித்து நீதி விசாரணை கோரிய மனுவை டிஸ்மிஸ் செய்த உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராம நவமி நாளில் நாட்டின் பல மாநிலங்களில் நிகழ்ந்த வகுப்புவாத மோதல்கள் குறித்து நீதி விசாரணை நடத்த கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டெல்லி, மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் அண்மையில் ராமநவமி நாள் நிகழ்வுகளின் போது வகுப்புவாத மோதல்கள் வெடித்தன. இந்த மதமோதல்கள் தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

Ram Navami Clashes: SC dismisses plea seeking judicial probe

இது தொடர்பாக வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். அவர் தமது மனுவில், அண்மையில் டெல்லி, குஜராத், ம.பி, உ.பி. மோதல்களை குறிப்பிட்டிருந்தார். அதேபோல் டெல்லியில் புல்டோசர் மூலம் குடியிருப்புகள் இடிக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆகையால் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் தமது மனுவில் வலியுறுத்தி இருந்தார்.

இம்மனு இன்று நீதிபதி எல்.என்.ராவ் பெஞ்ச் முன்னிலையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இத்தகைய மனுக்களை ஏற்க முடியாது என கூறி பொதுநலன் மனுவை நீதிபதிகள் டிஸ்மிஸ் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+