ஜனவரியில் சிபிஎஸ்சி தேர்வு கிடையாது... ரமேஷ் பொக்ரியால் உறுதி
டெல்லி: சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ஜனவரி, பிப்ரவரியில் நடத்தப்படாது என்றும் தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
Recommended Video

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள் இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தி வருகின்றன.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. 10, 11, 12 என பொதுத்தேர்வு மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தியுள்ளது.மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என அதிகாரிகள் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. அந்த அட்டவணை போலியானது என சிபிஎஸ்சி விளக்கம் அளித்திருந்தது.பொதுவாக நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் ஜனவரி அல்லது பிப்ரவரியில் இந்த தேர்வுகள் நடத்தப்படும். இந்த நிலையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நேற்று ஆசிரியர்களுடன் நேரடியாக உரையாடினார்.
அப்போது அவர் கூறுகையில், ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சிபிஎஸ்சி பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது. பல சிபிஎஸ்இ பள்ளிகள் கிராமப்புறங்களில் உள்ளன, எனவே, ஆன்லைன் தேர்வுகள் சாத்தியமில்லை. தேர்வுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications