இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் 2 வகையான கொரோனா பரிசோதனைகளுக்கு ஏற்பாடு!
டெல்லி: கொரோனா பரவல் உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களிலேயே 2 வகையான பரிசோதனைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பால் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் மிகவும் ஆபத்தானதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 13 நாடுகளில் ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை உறுதி செய்யப்படவில்லை. டெல்டா வகை வைரஸைவிட இது மிக அதிகவேகமாக பரவக் கூடியது.

மேலும் ஓமிக்ரான் கொரோனா பரவல் உள்ள நாடுகளான ஐரோப்பிய நாடுகள், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரீசியஸ், நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகியவற்றில் இருந்து வருவோருக்கு கடுமையான கட்டுப்பாடுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனைகளை அதிகரிக்கவும், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், சுகாதார வசதிகளை அதிகரிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்திருக்கிறது.
தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் வழக்கமான பரிசோதனை, விரைவான பரிசோதனை ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு PT-PCR பரிசோதனை மேற்கொள்ள ரூ500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. PT-PCR பரிசோதனை முடிவுகள் 5 அல்லது 6 மணிநேரத்தில் கிடைத்துவிடும். விரைவான கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பெற ரூ3,900 கட்டணம் செலுத்த வேண்டும். இந்த பரிசோதனை முடிவுகள் ஒரு மணிநேரத்தில் கிடைத்துவிடும். கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகள் விரைவான பரிசோதனை மேற்கொள்ள ரூ4,000 செலுத்த வேண்டும். வழக்கமான பரிசோதனை மேற்கொள்ள ரூ900 கட்டணம் செலுத்த வேண்டும்.
கொரோனா பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து மும்பைக்கு வரும் பயணிகள் கட்டாயமாக ஒரு வாரம் குவாரண்டைன்- தனிமைப்படுத்தப்படுவர். இந்த கால கட்டத்தில் 3 வகையான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இப்பரிசோதனைகள் மும்பைக்கு வருகை தந்த பின்னர் 2-வது, 4-வது மற்றும் 7-வது நாட்களில் மேற்கொள்ளப்படும். அனைத்து பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என வந்தாலும் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
Recommended Video
பெங்களூரு விமான நிலையத்தில் விரைவான கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ரூ3,900 செலுத்த வேண்டும். வழக்கமான கொரோனா பரிசோதனைக்கு ரூ500 செலுத்த வேண்டும்.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications