ஹேப்பி நியூஸ்.. வீட்டு கடன்களுக்கான இஎம்ஐ சலுகை.. மேலும் 3 மாதம் நீட்டிக்க வாய்ப்பு!
டெல்லி: வீட்டுக் கடன்களுக்கான மாதத் தவணையை 3 மாதங்களுக்கு தள்ளி வைத்து வழங்கப்பட்டுள்ள சலுகையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பது குறித்து ரிசர்வ் வங்கி யோசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு தற்போது மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வீட்டுக் கடன்களுக்கான மாத் தவணையை மேலும் 90 நாட்களுக்கு அதாவது 3 மாதங்களுக்கு நீட்டிக்கலாமா என்பது குறித்து ரிசர்வ் வங்கி யோசித்து வருகிறதாம்.

கொரோனா பரவல் காரணமாக நாடு தழுவிய லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து வீட்டுக் கடன் மாதத் தவணையை 3 மாதத்திற்கு தள்ளி வைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. தற்போது இதை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பது குறித்து ரிசர்வ் வங்கி யோசித்து வருகிறதாம். இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது வழங்கப்பட்டுள்ள 3 மாத சலுகைத் திட்டம் மே 31ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால் இது போதாது என்றும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளதால் ரிசர்வ் வங்கி நீட்டிப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு வங்கிகளும் கூட இதற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும் இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி எந்த முடிவையும் எடுக்கவில்லை. இருப்பினும் நேற்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை செயலதிகாரிகளுடன் ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையின்போது மாதத் தவணை சலுகை குறித்தும் அவர் விவாதித்ததாக தெரிகிறது.
Recommended Video
கொரோனா பாதிப்பு நாட்டில் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. பெரும்பாலான பகுதிகள் சிவப்பு மண்டலத்தின் கீழ்தான் வருகின்றன. எனவே அனைவருமே வீட்டுக் கடன்களுக்கான மாதத் தவணையை கட்ட முடியாமல் சிரமத்தில் உள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications