தூக்குலகூட தொங்குவேன்- ஜாமீன் கேட்க மாட்டேன்.. பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு குறித்து உமாபாரதி
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தனக்கு தூக்கு தண்டனை விதித்தால் கூட தூக்கில் தொங்குவேனே தவிர ஒருபோதும் ஜாமீன் கேட்க மாட்டேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி கூறியுள்ளார்.
1992 டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் உமாபாரதி மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உமாபாரதி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

உமாபாரதிக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் நட்டாவுக்கு அண்மையில் உமாபாரதி கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில், அயோத்தி ராமஜன்ம பூமி இயக்கத்தில் பங்கேற்றதற்காக பெருமைப்படுகிறேன். இந்த இயக்கத்தில் பங்கேற்றதற்காக எனக்கு தூக்கு தண்டனை கிடைத்தால் கூட அதை பெருமையாக ஏற்றுக் கொள்வேன். அதேநேரத்தில் தூக்கு மேடையில் தொங்கவும் தயாராக இருக்கிறேனே தவிர ஒருபோதும் ஜாமீன் கேட்கமாட்டேன்.
அப்படி நான் ஜாமீன் கேட்பது என்பது அயோத்தி ராமஜன்ம பூமி இயக்கத்தில் பங்கேற்ற என்னுடைய ஈடுபாட்டை கேள்விக்குறியாக்கிவிடும். என குறிப்பிட்டிருக்கிறார் உமாபாரதி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications