அக்னிபாத் திட்டம்- ஆட்சேர்ப்பு தொடர்பான அறிவிப்பாணை வெளியீடு-ஜூலை முதல் முன்பதிவு!
டெல்லி: நாட்டின் ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் இளைஞர்களை சேர்த்துக் கொள்ளக் கூடிய அக்னிபாத் திட்டத்துக்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அக்னிபாத் என்பது மத்திய அரசின் புதிய ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டமாகும். இதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு மட்டும் பணி வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களை சேர்க்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக எரும் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இன்று நாடு தழுவிய பாரத்பந்த் போராட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து அக்னிபாத் திட்டத்தில் சேருவதற்கான வயது வரம்பு 23 ஆக அதிகரிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை.
இந்நிலையில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அக்னிபாத் வீரர்களுக்கான முன்பதிவு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications