குறைந்த வாடகையில் தங்குமிடம்.. நாடு முழுக்க வரப்போகுது.. பட்ஜெட்டில் அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா!
4.1 கோடி இளைஞர்களுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள் நலனுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.டெல்லி: நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் அரசு, தனியார் பங்களிப்பில் குடியிருப்புகள் அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
2024-25-க்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து 7-வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். நரேந்திர மோடி தலைமையில் 3-வது முறையாக ஆட்சி அமைந்த பிறகு முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

4.1 கோடி இளைஞர்களுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளைஞர்கள் நலனுக்காக 5 சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
அடுத்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் ஒரு கோடி இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் வேலைக்கான பயிற்சி அளிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் வளர்ச்சிக்கு 3 அம்ச திட்டங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் அறிவித்தார். நாடு முழுவதும் பிற மாநிலங்களுக்கு சென்று பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த மாத வாடகையில் அரசு, தனியார் பங்களிப்பில் தங்குமிடம் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications