உவ்வே.! குப்பையில் கிடந்த உணவை எடுத்து.. நைசாக கஸ்டமருக்கு கொடுத்த ஊழியர்.. பிரபல உணவகத்தில் பகீர்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரபல உணவகத்தில் குப்பையில் இருந்த பிரெஞ்சு ப்ரைஸை எடுத்து வாடிக்கையாளருக்குக் கொடுத்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த காலத்தில் பெரும்பாலானோர் படிப்பு அல்லது வேலை நிமித்தமாக வெளியூர்களிலேயே தங்க வேண்டி உள்ளது. இப்படி வெளியூர்களில் இருக்கும் பலருக்கும் உணவு தான் மிக முக்கிய பிரச்சினையாக இருக்கிறது.

இதில் தனியாக ரூம் எடுத்துத் தங்கும் சிலர் வீடுகளிலேயே சமைத்துச் சாப்பிடுகிறார்கள். ஆனால், தனித்து இருக்கும் பெரும்பாலானோர் உணவகங்களிலேயே சாப்பிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.

 Restaurant assistant manager arrested for serving french fries from garbage

ஷாக் சம்பவம்: இவர்கள் அனைத்து வேளையும் வெளியே தான் உணவைச் சாப்பிடுகிறார்கள். வெளியே சாப்பிடும் போது என்ன தான் வகை வகையாகச் சாப்பிட்டாலும் வீடுகளைப் போலச் சுகாதாரமாக அனைத்து ஹோட்டல்களும் இருக்கும் எனச் சொல்ல முடியாது. சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படாத உணவைச் சாப்பிட்டால் நமக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படவே செய்யும். இதன் காரணமாக மருத்துவர்கள் முடிந்தவரை வீட்டிலேயே சமைத்துச் சாப்பிடச் சொல்வார்கள். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இங்கே நடந்துள்ளது.

இந்த காலத்தில் துரித உணவைச் சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னை உள்ளிட்ட நகரப்புறங்களில் வசிப்போர் பெரும்பாலும் துரித உணவுகளையே விரும்பி சாப்பிடுகிறார்கள். இப்படி வெளியே சென்று நாம் சாப்பிடும் போது உணவகங்களில் குறைந்தபட்ச சுகாதாரம் இருக்கும் என்றே நாம் நம்புவோம். வாடிக்கையாளருக்கும் உணவகத்துக்கும் இடையே நம்பிக்கை வலுவாக இருந்தால் மட்டுமே இந்த பிஸ்னஸ் நன்றாக இருக்கும்.

குப்பையில் இருந்த உணவு: அதை உடைக்கும் வகையிலான சம்பவம் நடந்துள்ளது. பர்கர் கிங் உணவகத்தில் உதவி மேலாளரே குப்பையில் இருந்த பிரெஞ்ச் ப்ரைஸை எடுத்து வாடிக்கையாளர் ஒருவருக்குக் கொடுத்துள்ளார். அதாவது குப்பையில் இருந்த பிரெஞ்ச் ப்ரைஸை எடுத்த அந்த நபர் அதை புதிய பிரெஞ்ச் ப்ரைஸ் உடன் பிக்ஸ் செய்து வாடிக்கையாளருக்கு வழங்கியுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 9ஆம் தேதி நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்ல வேலையாக இந்தச் சம்பவம் நம்ம ஊரில் நடக்கவில்லை. இது அமெரிக்காவின் தென் கரோலினாவில் உள்ள பர்கர் கிங்கில் நடந்துள்ளது. அங்கே முதலில் இரண்டு பெண்கள் வாக்குவாதம் செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்ற போது அந்த பெண்கள் ஆவேசமாகக் கத்திக் கொண்டு இருந்துள்ளனர். தங்களுக்குக் குப்பையில் இருந்த உணவை எடுத்துக் கொடுத்ததாக கத்திக் கொண்டிருந்தனர்.

என்ன நடந்தது: அப்போது அவர்களை அமைதியாக இருக்கும்படி போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் தொடர்ந்து ஆவேசமாகக் கத்திக் கொண்டு இருக்க.. போலீசாரின் உத்தரவைப் பின்பற்றவில்லை என்று கூறி அவர்களைக் கைது செய்துள்ளனர். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து பர்கர் கிங் நிர்வாகத்திடம் இருந்து போலீசாருக்கு மெயில் சென்றுள்ளது.

அதாவது தங்கள் நிறுவனத்தின் மேனேஜர் தான் குப்பையில் இருந்த ப்ரைஸை எடுத்து வாடிக்கையாளருக்குக் கொடுத்ததாகவும் அதுவே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து கிறிஸ்டின் மேஜர் என்ற 39 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+