டெல்லி வன்முறை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் குழு விசாரிக்கிறது
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக (சி.ஏ.ஏ.) நடந்த போராட்டங்கள் டெல்லியில் வன்முறையாக வெடித்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை நடத்த உள்ளது.
வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. இதில் 53 பேர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

இம்மோதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் அமைப்புகளின் தலைவர் உமர் காலித் உள்ளிட்ட பலர் ஊபா உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டனர். சீதாராம் யெச்சூரி போன்ற அரசியல் தலைவர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.
இதனிடையே Constitutional Conduct Group (CCG) என்ற அமைப்பு டெல்லி வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுர், டெல்லி, சென்னை உயர்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி ஏபி ஷா, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ். சோதி, பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ், முன்னாள் உள்துறை செயலாளர் ஜிகே பிள்ளை, முன்னாள் போலீஸ் உயர்அதிகாரி மீரான் சதா போர்வான்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இனி இந்த குழுவானது, 'Citizens Committee on the Delhi Riots of February 2020: Contexts, Events and Aftermath என்ற பெயரில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications