Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி வன்முறை தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் குழு விசாரிக்கிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக (சி.ஏ.ஏ.) நடந்த போராட்டங்கள் டெல்லியில் வன்முறையாக வெடித்தது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை நடத்த உள்ளது.

வடகிழக்கு டெல்லியில் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டம் மிகப் பெரிய வன்முறையாக வெடித்தது. இதில் 53 பேர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.

Retired judges and ex-civil servants to independently probe Delhi riots

இம்மோதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் அமைப்புகளின் தலைவர் உமர் காலித் உள்ளிட்ட பலர் ஊபா உள்ளிட்ட சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டனர். சீதாராம் யெச்சூரி போன்ற அரசியல் தலைவர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

இதனிடையே Constitutional Conduct Group (CCG) என்ற அமைப்பு டெல்லி வன்முறைகள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதிகள், முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இந்த குழுவில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுர், டெல்லி, சென்னை உயர்நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதி ஏபி ஷா, டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.எஸ். சோதி, பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ், முன்னாள் உள்துறை செயலாளர் ஜிகே பிள்ளை, முன்னாள் போலீஸ் உயர்அதிகாரி மீரான் சதா போர்வான்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இனி இந்த குழுவானது, 'Citizens Committee on the Delhi Riots of February 2020: Contexts, Events and Aftermath என்ற பெயரில் அழைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+