தமிழக மின்வாரியத்துக்கு கடன்...விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்தாகுமா!!
டெல்லி: கடனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ. 20,000 கோடி அளவிற்கு கடன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மின்சாரம் வாங்கிய வகையில் பல்வேறு நிறுவனங்களுக்கு தமிழக மின்வாரியம் 18,068 கோடி ரூபாய் ஏற்கனவே செலுத்த வேண்டி உள்ளது. இது நிலுவையில் உள்ளது. நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலம்தான் முதல் இடத்தில் உள்ளது. இந்த மாநிலம் மட்டும் இதுவரை மின்சாரம் வாங்கிய வகையில் ரூ. 35,156 கோடிக்கு கடன் பாக்கி வைத்துள்ளது. இதற்கு அடுத்த படியாக தமிழ்நாடு உள்ளது.

இந்த நிலையில்தான் கொரோனா காலத்தில் மீண்டு வருவதற்கு கடனில் இருக்கும் மாநிலங்களுக்கு ரூ. 90 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆனால், சில நிபந்தனைகளையும் விதித்து இருந்தார். அதாவது. மின்சார வாரியம் தனியார்மயம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து போன்ற நிபந்தனைகளையும் வைத்து இருந்தார். மேலும், மின்சார திருட்டு, மின்சாரம் வீணாவது போன்றவற்றுக்கு மின் விநியோகஸ்தர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பல்வேறு மாநிலங்களும் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளன. அந்த வகையில் ரூ. 673 கோடி அளவிற்கு மாநிலங்கள் கடன் கேட்டுள்ளன. ஆனால், கடன் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் மாநிலங்கள்தான் என்று கூறப்படுகிறது. கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப்பதால், மாநிலங்களால் எளிதில் கடனை பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகம் வந்த மத்திய எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம், ரூ. 20 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழக அரசு கடன் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு உறுதியாக ரூ. 20 ஆயிரம் கோடி கடன் கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தக் கடன் கிடைக்க வேண்டுமானால், மத்திய அரசின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். இலவச மின்சாரம் தருவதை நிறுத்திவிட்டு, மானியம் வழங்கும் நடைமுறையை தமிழகத்திடம் மத்திய அரசு வலியுறுத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications