தமிழக மின்வாரியத்துக்கு கடன்...விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்தாகுமா!!
டெல்லி: கடனில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ. 20,000 கோடி அளவிற்கு கடன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
மின்சாரம் வாங்கிய வகையில் பல்வேறு நிறுவனங்களுக்கு தமிழக மின்வாரியம் 18,068 கோடி ரூபாய் ஏற்கனவே செலுத்த வேண்டி உள்ளது. இது நிலுவையில் உள்ளது. நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலம்தான் முதல் இடத்தில் உள்ளது. இந்த மாநிலம் மட்டும் இதுவரை மின்சாரம் வாங்கிய வகையில் ரூ. 35,156 கோடிக்கு கடன் பாக்கி வைத்துள்ளது. இதற்கு அடுத்த படியாக தமிழ்நாடு உள்ளது.

இந்த நிலையில்தான் கொரோனா காலத்தில் மீண்டு வருவதற்கு கடனில் இருக்கும் மாநிலங்களுக்கு ரூ. 90 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்து இருந்தார். ஆனால், சில நிபந்தனைகளையும் விதித்து இருந்தார். அதாவது. மின்சார வாரியம் தனியார்மயம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து போன்ற நிபந்தனைகளையும் வைத்து இருந்தார். மேலும், மின்சார திருட்டு, மின்சாரம் வீணாவது போன்றவற்றுக்கு மின் விநியோகஸ்தர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
பல்வேறு மாநிலங்களும் கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளன. அந்த வகையில் ரூ. 673 கோடி அளவிற்கு மாநிலங்கள் கடன் கேட்டுள்ளன. ஆனால், கடன் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் மாநிலங்கள்தான் என்று கூறப்படுகிறது. கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருப்பதால், மாநிலங்களால் எளிதில் கடனை பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழகம் வந்த மத்திய எரிசக்தி அமைச்சர் ஆர்.கே.சிங்கிடம், ரூ. 20 ஆயிரம் கோடி அளவிற்கு தமிழக அரசு கடன் கேட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்திற்கு உறுதியாக ரூ. 20 ஆயிரம் கோடி கடன் கிடைக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்தக் கடன் கிடைக்க வேண்டுமானால், மத்திய அரசின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். இலவச மின்சாரம் தருவதை நிறுத்திவிட்டு, மானியம் வழங்கும் நடைமுறையை தமிழகத்திடம் மத்திய அரசு வலியுறுத்தலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
Seeman: யூடியூபர் மாரிதாஸ் கைது! தவெக அரசின் அதிகார திமிரின் உச்சம்! சீமான் கொந்தளிப்பு -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
மின்துறைக்கு குட்நியூஸ்.. 15,000 பணியிடங்கள் நிரப்பப்படும்.. அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications