Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"2000 ரூபாய்" மாத்தியாச்சா.. ரூ.2000 நோட்டு மாற்றுவதில் மத்திய அரசு புது அறிவிப்பு.. டைம் நெருங்குது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிவிட்டீர்களா? இதுகுறித்து மத்திய அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.. என்ன அது?

2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக, மத்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அறிவித்திருந்தது.. இதையடுத்து, இந்த நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணிகளும் வேகம் எடுத்தன..

Rs 2000 and No Extension time for 2000 Rupees Notes change, says Central Government

அந்தவகையில், செப்டம்பர் 30-ந் தேதி வரை இதற்கான கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.,. ஆரம்பத்தில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணி குறைவாகவே இருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் அதிக அளவில் டெபாசிட்கள் நடந்தன.

குறிப்பாக, 2000 ரூபாய் நோட்டுகளின் பரிவர்த்தனைகள் வங்கிகளில் குறிப்பிடத்தக்க எழுச்சியை காண முடிந்தது என்று மீடியாக்களில் செய்திகளும் வெளியாகியிருந்தன.

அறிவிப்பு: வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதிக அளவில் பங்களிப்பு இருந்தாலும், வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும், ரூ.2000 நோட்டுக்களை மாற்றி வருகின்றனர். இதனிடையே, இந்திய எஸ்பிஐ வங்கி ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன்படி, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பது குறித்து ஒரு பிரத்யேக அறிக்கையே வெளியிட்டது.

பெட்ரோல் பங்க்: அந்த அறிக்கையில், "2000 ரூபாய் நோட்டு திரும்ப பெற்றதில் இந்தியாவில் நுகர்வு பிரிவில், கிட்டத்தட்ட 55000 கோடி ரூபாய் அளவிலான தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது.. இந்த அறிவிப்பிற்கு பிறகு, தங்கம், ஏசி, மொபைல், போன், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் பணத்தை செலவு செய்துள்ளனர்.. பெட்ரோல் பங்களில் மக்கள் அதிகப்படியான 2000 ரூபாய் நோட்டுகளை மக்கள் செலவு செய்கிறார்கள்.

ஈகாமர்ஸ், டிஜிட்டல் சேவைகளில் பெரும்பாலான கேஷ் ஆன் டெலிவரிகளுக்கு 2000 ரூபாய் நோட்டு கொடுக்கப்பட்டுள்ளது.. 2000 ரூபாய் நோட்டு மூலம் பெறப்பட்ட 92000 கோடி ரூபாய் அளவிலான வங்கி டெபாசிட் தொகையில், சுமார் 55000 கோடி ரூபாயை மக்கள் திரும்பபெற்றுள்ளனர்" என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்திருந்தது.

லிஸ்ட் போட்ட எஸ்பிஐ: அதுமட்டுமல்ல, 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதால் வங்கிகளில் டெபாசிட்டுகள் அதிகரிக்கும்.. கடன்கள் திருப்பி செலுத்தப்படுவது அதிகரிக்கும்.. நுகர்வு அதிகரிக்கும், ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாய்க்கு வேகம் கிடைக்கும், ஜிடிபி உயருவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.. ரூ.2000 நோட்டுகள் உயர் மதிப்புடையது என்பதால், டிஜிட்டல் ரூபாய்க்கு மாறுவது எளிதாகும் என்றெல்லாம் எஸ்பிஐ அந்த அறிக்கையில் லிஸ்ட் போட்டு கூறியிருந்தது.

எனினும், ரூ.2000 நோட்டு திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கியின் முடிவிற்கு எதிரான டெல்லி கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற ரிசர்வ் வங்கிக்கு அதிகாரமில்லை என்ற பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில், அந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கான கால அவகாசம் வழங்கப்படுமா? என்பது குறித்து மக்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.. மேலும், 2000 ரூபாய் நோட்டுகளை போல, உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டமும் அரசிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார்கள்.

விளக்கம்: இதற்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்து மூலம் பதிலளித்தார்.. அப்போது, இப்போதைய சூழலில்,2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்த பரிசீலனை எதுவுமே அரசிடம் இல்லை. அதேபோல, 2000 ரூபாய் நோட்டுகளை போல, உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறும் திட்டமும் அரசிடம் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.

இந்த திடீர் விளக்கத்திற்கு காரணம், "ஒருவேளை தேவைப்படும்பட்சத்தில், கால அவகாசத்தை நீட்டிப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு உள்ளது" என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் ஒருமுறை சூசகமாக தெரிவித்திருந்தார்.. அதனால்தான், நேற்றைய தினம் மக்களவையில் இதுகுறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது.. இதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

டிபாசிட்: கடந்த மாதம் 30ம் தேதி வரை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறப்பட்ட 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, சுமார் 2.72 லட்சம் கோடி ரூபாய் என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டிருந்தது. மேலும், திரும்ப பெறப்பட்ட மொத்த 2,000 ரூபாய் நோட்டுகளில், 87 சதவீதம் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது, மீதமுள்ள 13 சதவீதம், வேறு மதிப்புள்ள நோட்டுகளாக மாற்றப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+