யெஸ் வங்கி பிரச்சனை.. தவறான நிர்வாகம்.. மோடி அரசுக்கு நேர் எதிராக ஆர்எஸ்எஸ் கருத்து
டெல்லி: யெஸ் வங்கி பிரச்சனையில் நரேந்திர மோடி அரசின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிராக ஆர்எஸ்எஸ் கருத்தை வெளிப்படுத்தி உள்ளது. யெஸ் வங்கி விவகாரத்திற்கு ரிசர்வ் வங்கியின் தவறான நிர்வாகமே காரணம் என்றும், ரிசர்வ் வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டி உள்ளது.
Recommended Video
வாராக்கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் யெஸ் வங்கி மூலதனத்திற்கு தேவையான நிதியை திரட்ட முடியாமல் கடும் நெருக்கடியில் சிக்கியது.
இதனால் திவால் நிலைக்கு செல்லும் அளவுக்கு சென்றது. இதையடுத்து ரிசர்வ் வங்கி தலையிட்டு நிர்வாகத்தை சீர் செய்து வருகிறது. மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரிசர்வ் வங்கி
இந்நிலையில் பிரபல ஆங்கில இணைய ஊடகத்திடம் பேசிய சுதேசி ஜாக்ரான் மன்ச் (எஸ்.ஜே.எம்) தலைவர் அஸ்வினி மகாஜன், சரியான நேரத்தில் தலையிடாததால், யெஸ் வங்கியின் தோல்விக்கு சம்பந்தம் இல்லை என ரிசர்வ் வங்கி கைகளை கழுவ முடியாது. ரிசர்வ் வங்கி இந்த விவகாரத்தில் முன்பே தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

கண்டுபிடிக்க முடியவில்லை
தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில் வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வழிமுறைகள் இருப்பதால் , ரிசர்வ் வங்கி ஊமையாக ஒரு பார்வையாளராக நடந்து கொள்ள கூடாது. கடந்த சில ஆண்டுகளில் யெஸ் வங்கியின் கடன்கள் அளவு 30 சதவீதத்திற்கு மேல் உயர்ந்த போது ஏன் ரிசர்வ் வங்கியால் இந்த பிரச்சனையை கண்டுபிடிக்க முடியவில்லை?" இவ்வாறு கூறினார்.

நிதி முறைகேடுகள்
நிதி முறைகேடுகள் மற்றும் வங்கியின் செயல்பாடுகளில் தவறான நிர்வாகம் ஆகிய குற்றச்சாட்டுகள் யெஸ் வங்கி மீது வெடித்ததால், ரிசர்வ் வங்கியும், பிரதமர் மோடி அரசாங்கமும் யெஸ் வங்கியின் நிர்வாகத்தை கையில் எடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த கருத்துக்களை ஆர்எஸ்எஸ் வெளிப்படுத்தி உள்ளது.

ஒரே கருத்து
முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பி. சிதம்பரம் மோடி அரசாங்கத்தை விமர்சித்து பேசுகையில் இது நிதி நிறுவனங்களின் தவறான நிர்வாகத்திற்கு பொறுப்பாகும் என்று கூறியிருந்தார். கிட்டதட்ட சிதம்பரத்தின் கருத்தையே சுதேசி ஜாக்ரான் மன்ச் (எஸ்.ஜே.எம்) தலைவர் அஸ்வினி மகாஜனின் கருத்தும் பிரதிபலிக்கிறது.
எனினும் யெஸ் வங்கி விவகாரத்தில் ரிசர்வ் வங்கி சரியான நேரத்தில் செயல்பட்டது என்றும் 2017ம் ஆண்டே செயல்பாடுகளை கண்காணித்து நோட்டீஸ் அனுப்பியது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறினார்
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications