யெஸ் வங்கி பிரச்சனை.. தவறான நிர்வாகம்.. மோடி அரசுக்கு நேர் எதிராக ஆர்எஸ்எஸ் கருத்து
டெல்லி: யெஸ் வங்கி பிரச்சனையில் நரேந்திர மோடி அரசின் நிலைப்பாட்டிற்கு நேர் எதிராக ஆர்எஸ்எஸ் கருத்தை வெளிப்படுத்தி உள்ளது. யெஸ் வங்கி விவகாரத்திற்கு ரிசர்வ் வங்கியின் தவறான நிர்வாகமே காரணம் என்றும், ரிசர்வ் வங்கியே பொறுப்பேற்க வேண்டும் என்றும் குற்றம்சாட்டி உள்ளது.
Recommended Video
வாராக்கடன் பிரச்சனையில் சிக்கி தவித்து வரும் யெஸ் வங்கி மூலதனத்திற்கு தேவையான நிதியை திரட்ட முடியாமல் கடும் நெருக்கடியில் சிக்கியது.
இதனால் திவால் நிலைக்கு செல்லும் அளவுக்கு சென்றது. இதையடுத்து ரிசர்வ் வங்கி தலையிட்டு நிர்வாகத்தை சீர் செய்து வருகிறது. மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ரிசர்வ் வங்கி
இந்நிலையில் பிரபல ஆங்கில இணைய ஊடகத்திடம் பேசிய சுதேசி ஜாக்ரான் மன்ச் (எஸ்.ஜே.எம்) தலைவர் அஸ்வினி மகாஜன், சரியான நேரத்தில் தலையிடாததால், யெஸ் வங்கியின் தோல்விக்கு சம்பந்தம் இல்லை என ரிசர்வ் வங்கி கைகளை கழுவ முடியாது. ரிசர்வ் வங்கி இந்த விவகாரத்தில் முன்பே தலையிட்டு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

கண்டுபிடிக்க முடியவில்லை
தினசரி மற்றும் வாராந்திர அடிப்படையில் வங்கிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் வழிமுறைகள் இருப்பதால் , ரிசர்வ் வங்கி ஊமையாக ஒரு பார்வையாளராக நடந்து கொள்ள கூடாது. கடந்த சில ஆண்டுகளில் யெஸ் வங்கியின் கடன்கள் அளவு 30 சதவீதத்திற்கு மேல் உயர்ந்த போது ஏன் ரிசர்வ் வங்கியால் இந்த பிரச்சனையை கண்டுபிடிக்க முடியவில்லை?" இவ்வாறு கூறினார்.

நிதி முறைகேடுகள்
நிதி முறைகேடுகள் மற்றும் வங்கியின் செயல்பாடுகளில் தவறான நிர்வாகம் ஆகிய குற்றச்சாட்டுகள் யெஸ் வங்கி மீது வெடித்ததால், ரிசர்வ் வங்கியும், பிரதமர் மோடி அரசாங்கமும் யெஸ் வங்கியின் நிர்வாகத்தை கையில் எடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த கருத்துக்களை ஆர்எஸ்எஸ் வெளிப்படுத்தி உள்ளது.

ஒரே கருத்து
முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பி. சிதம்பரம் மோடி அரசாங்கத்தை விமர்சித்து பேசுகையில் இது நிதி நிறுவனங்களின் தவறான நிர்வாகத்திற்கு பொறுப்பாகும் என்று கூறியிருந்தார். கிட்டதட்ட சிதம்பரத்தின் கருத்தையே சுதேசி ஜாக்ரான் மன்ச் (எஸ்.ஜே.எம்) தலைவர் அஸ்வினி மகாஜனின் கருத்தும் பிரதிபலிக்கிறது.
எனினும் யெஸ் வங்கி விவகாரத்தில் ரிசர்வ் வங்கி சரியான நேரத்தில் செயல்பட்டது என்றும் 2017ம் ஆண்டே செயல்பாடுகளை கண்காணித்து நோட்டீஸ் அனுப்பியது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறினார்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications