தேசிய கொடியை நீங்க வைங்க பாப்போம்! ஆர்எஸ்எஸ்ஸை சீண்டிய சித்தராமையா? அடுத்த நாள் காலையில் பார்த்தால்?
டெல்லி : ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்படுமா? என காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பிய நிலையில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் எனப்படும் ஆர்எஸ்எஸ்-ன் சமூக ஊடக கணக்குகளின் சுயவிவரப் ப்ரோபைல் பிக்சர்கள், அதன் பாரம்பரிய காவி கொடியிலிருந்து, தேசியக் கொடியாக மாற்றப்பட்டுள்ளது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' எனப்படும், சுதந்திர தின அமுதப் பெருவிழாவனது கொண்டாடப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஆகஸ்ட் 2 முதல் 15ம் தேதிக்குள் மூவர்ண கொடியை பொதுமக்களும், பிரபலங்களும், சமூக வலைதளங்களில் சுயவிவரப் படமாக (ப்ரோபைல் பிக்சர்0 வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

பிரதமர் கோரிக்கை
பிரதமரின் இந்த கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் ஏராளமானவர்கள் தங்களது பேஸ்புக் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளில் தேசியக் கொடியை ப்ரொபைல் பிக்சராக மாற்றியுள்ளனர். இதே போல பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று கேரளாவில் பெரும் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ,சுரேஷ்கோபி, இசையமைப்பாளர் கீரவாணியும், பாலிவுட் அக்ஷய்குமார், அஜய் தேவ்கான் உள்ளிட்ட பல பிரபல நடிகர்கள் தங்கள் ப்ரொபைல் பிச்சர்களை மாற்றியுள்ளனர்.

காங்கிரஸ் விமர்சனம்
அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமூக வலைதளக்கணக்குகளில் தேசிய கொடி மாற்றப்படவில்லை.
மத்தியில் ஆளும் பாஜகவின் அரசியல் ஊற்றுக்கண்ணான ஆர்எஸ்எஸ், தேசியக் கொடி குறித்த அதன் நிலைப்பாடு குறித்து காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, " தொடக்கத்தில் இருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தேசிய கொடியை ஏற்கவில்லை. அதுபற்றி பா.ஜனதா விளக்கம் கொடுக்கவில்லை. நமது தேசிய கொடி, அரசியல் சாசனத்திற்கு எதிராக அந்த அமைப்பினர் கருத்து கூறினர். நாக்பூரில் உள்ள அந்த அமைப்புன் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றினார்களா?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

தேசியக் கொடி
மேலும் நாக்பூரில் உள்ள தலைமையகத்தில் 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை ஏற்றாத அமைப்பு, 'திரங்கா'வை சுயவிவரமாக மாற்ற வேண்டும் என்ற பிரதமரின் கோரிக்கைக்கு இணங்குமா என, ஆர்.எஸ்.எஸ். பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளிப்படையாக தாக்கினார். இந்நிலையில் வெள்ளிக்கிழமையான இன்று ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் எனப்படும் ஆர்எஸ்எஸ்-ன் சமூக ஊடக கணக்குகளின் சுயவிவரப் ப்ரோபைல் பிக்சர்கள், அதன் பாரம்பரிய காவி கொடியிலிருந்து, தேசியக் கொடியாக மாற்றப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்.
மேலும் ஆர்எஸ்எஸ் நாடு முழுவதும் தனது அனைத்து அலுவலகங்களிலும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது என அந்த அமைப்பின் விளம்பரத் துறை இணைப் பொறுப்பாளர் நரேந்தர் தாக்கூர் கூறியுள்ளார். மேலும் ஆர்.எஸ்.எஸ்.ன் சமூக ஊடக கணக்குகள் அதன் சுயவிவரப் படத்தை அதன் நிறுவனக் கொடியிலிருந்து தேசியக் கொடியாக மாற்றியதாகவும், 'ஹர் கர் திரங்கா' பிரச்சாரத்தில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications