"டென்ஷன் வேண்டாம்.! நாங்க சீப்பாக தறோம்..!" இந்தியாவுக்கு அள்ளி கொடுக்கும் ரஷ்யா.. ஓ இதுதான் காரணமா
டெல்லி: தற்போதைய சூழலில் இந்தியாவும் சீனாவும் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குகின்றன.
உக்ரைன் போர் சர்வதேச அளவில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டது. கொரோனாவில இருந்து மெல்ல மீண்டு வந்த சர்வதேச பொருளாதாரத்திற்கு அது அதிர்ச்சியைக் கொடுத்துவிட்டது.
இந்தப் போர் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. உலகின் பல நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை வாங்கப் போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டன.

ரஷ்யா
இதனால் ஐரோப்பிய நாடுகளுக்குக் கடுமையான எரிசக்தி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் ரஷ்யாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏனென்றால், ரஷ்யாவின் பொருளாதாரம் பெரும்பாலும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை மையமாக வைத்தே இருக்கிறது. இப்போது இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இது ரஷ்யப் பொருளாதாரத்தை இக்கட்டான சூழலில் தள்ளி உள்ளது.

இந்தியா
இந்தியா வழக்கமாக ஈராக், சவுதி அரேபியாவில் இருந்து தான் அதிக எரிபொருளை இறக்குமதி செய்யும். ஆனால், ரஷ்யா எப்படியாவது தனது கச்சா எண்ணெய்யை விற்க வேண்டும் என்பதால் சவுதியை விடக் குறைவான விலைக்கு இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய்யை வழங்குகிறது. குறைந்த விலை என்றால் எதோ ஓரிரு டாலர் இல்லை. கடந்த ஏப்ரல் ஜூன் காலகட்டத்தில் மட்டும் பேரல் ஒன்றுக்கு 19 டாலர் குறைவாக இந்தியாவுக்கு கொடுத்து உள்ளது.

இறக்குமதி
இதனால் ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் அளவு அதிகரித்து உள்ளது. கடந்த பிப் மாதம், ரஷ்யாவிடம் இருந்து மிகக் குறைவான அளவே கச்சா எண்ணெய் பெறப்பட்ட நிலையில், சில மாதங்களில் அது இந்திய இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேலாக அதிகரித்து உள்ளது. இந்தியா இப்போது ஈராக்கிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவிடம் இருந்து தான் அதிக கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது.

இந்தியா & சீனா
உக்ரைன் போருக்குப் பின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில்லை. தற்போதைய சூழலில் இந்தியாவும் சீனாவும் மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை வாங்குகின்றன. குறிப்பாக இந்தியா தனது தேவைகளில் 85% இறக்குமதி மூலமே பூர்த்தி செய்கிறது. இந்த நேரத்தில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைப்பது இந்தியாவுக்குப் பெரியளவில் உதவுகிறது.

மே மாதம்
கடந்த மே மாதமும் கூட ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் இந்தியா இறக்குமதி செய்தது.இதனால் முந்தை ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட கச்சா எண்ணெய் 10 மடங்கு அதிகரித்து உள்ளதாக அதில் கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் சவுதி அரேபியாவும் இப்போது தங்கள் இருப்பை ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பத் தொடங்கி உள்ளது.

47.5 பில்லியன் டாலர்
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் காரணமாகக் கச்சா எண்ணெய் விலையும் தேவையும் குறைவாக இருந்தது. அப்போது இரண்டாம் காலாண்டில் 25.1 பில்லியன் டாலர் மதிப்பிலான எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு விலையும் தேவையும் அதிகரித்து உள்ளதால் 47.5 பில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications