சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் அனுமதி? மறுஆய்வு மனுக்களை இன்று விசாரிக்கும் உச்சநீதிமன்றம்
டெல்லி: அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதிப்பது தொடர்பான 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இந்த மேல்முறையீட்டை விசாரிக்கிறது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
கேரளா மாநிலத்தில் உள்ள உலக புகழ்பெற்ற சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் இருந்து பல லட்சம் பக்தர்கள் ஐயப்பனைத் தரிசிக்க வருகிறார்கள். இதற்கிடையே சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் ஐயப்பன் கோயிலில் அனுமதிப்பது தொடர்பான 2018 உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுக்களை இன்றைய தினம் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது.

9 நீதிபதி அமர்வு
இதற்காக 9 நீதிபதிகள் கொண்ட அமர்வைக் கடந்த சனிக்கிழமை உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, எம்.எம். சுந்தரேஷ், அஹ்சனுதீன் அமானுல்லா, அரவிந்த் குமார், ஏ.ஜி. மாசிஹ், ஆர். மகாதேவன், பிரசன்னா பி. வரலே, ஜாய்மால்யா பக்ஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சபரிமலை சீராய்வு வழக்கை ஏப்ரல் இறுதிக்குள் முடிவுக்குக் கொண்டுவர இந்த அமர்வு திட்டமிட்டுள்ளது. கேரள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் அனுமதிக்கப்பட்ட 2018 தீர்ப்பு தொடர்பான ரிட், சீராய்வு மனுக்கள் இந்த வழக்கில் அடங்கும். ஆறு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, இந்த விவகாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஏப்ரல் இறுதி
முன்னதாக, 2019ல் அப்போதைய தலைமை நீதிபதி ஏ. பாப்டே அமைத்த ஒன்பது நீதிபதிகள் அமர்வின் விசாரணைகள், கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டது. அந்த அமர்வில் இருந்தவர்களில் நீதிபதி சூர்ய காந்த் மட்டுமே தற்போது பணியில் இருக்கிறார். மற்றவர்கள் ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் இறுதிக்குள் விசாரணையை முடிப்பதே திட்டமாக உள்ளது.
இதில் மனுதாரர்கள் வாதிட ஏப்ரல் 7-9 தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எதிர் தரப்பினருக்கு ஏப்ரல் 14-16 விசாரணை நாட்களை ஒதுக்கியுள்ளது. ஏப்ரல் 21ம் தேதி மறுவிளக்கங்களை அளிக்கலாம். தொடர்ந்து அமிகஸ் கியூரியின் இறுதி வாதங்கள் ஏப்ரல் 22 அன்றும் நடைபெறும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை அனைத்து தரப்பினரும் பின்பற்ற நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
கடந்து வந்த பாதை
கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி கேரள சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய விதிக்கப்பட்ட தடையை முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ரத்து செய்தது. இது அரசியலமைப்பின் 25வது பிரிவை மீறுவதாகவும், 1965 விதிகளின் 3(b) சட்டவிரோதமானது எனவும் 4:1 பெரும்பான்மையுடன் அமர்வு தீர்ப்பளித்தது. அப்போது அமர்வில் இருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மட்டும் பெண்கள் சபரிமலையில் அனுமதிக்கப்படுவதை எதிர்த்தார். மத மரபுகளில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்றார். அவரது மாறுபட்ட கருத்து, மறு ஆய்வு வாதங்களுக்கு அடிப்படையாக அமைந்தது.
இந்த தீர்ப்பு வந்தவுடன் கேரளா முழுக்க போராட்டங்கள் வெடித்தது. 2019 ஜனவரி 2ம் தேதி இரு பெண்கள் கோயிலில் வழிபாடு நடத்தியதால் எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து கோயில் தலைமை அர்ச்சகர் கண்டாரு ராஜீவரு உள்ளிட்டோரால் 50-க்கும் மேற்பட்ட மறு ஆய்வு மனுக்கள் தாக்கலாயின. தொடர்ந்து 2019 நவம்பர் 14ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதி மறு ஆய்வு அமர்வு ஒரு முடிவெடுத்தது.
விசாரணை
அதாவது மறு ஆய்வு மனு தொடர்பாகத் தீர்ப்பளிக்க மறுத்த அமர்வு, அரசியலமைப்புச் சட்டக் கேள்விகளை ஆராய ஒரு பெரிய பெஞ்சுக்கு இதைப் பரிந்துரைத்தது. மேலும், வெறுமன சபரிமலை விவகாரம் என இதைச் சுருக்கிவிடாமல் முஸ்லிம் பெண்கள் மசூதி நுழைவு போன்ற பிற மத நம்பிக்கைகள் தொடர்பான கேள்விகளையும் இதில் நீதிபதிகள் இணைத்தனர்.
கொரோனா காரணமாக அப்போதைய தலைமை நீதிபதி ஏ. பாப்டே அமைத்த ஒன்பது நீதிபதிகள் அமர்வின் விசாரணை உரிய முறையில் நடக்கவில்லை. இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் சபரிமலை விவகாரத்தை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு எடுக்கிறது.
-
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
வேட்பாளர் லிஸ்டில் பெயர் இல்லை.. அண்ணாமலை இன்று மாலையே முக்கிய மூவ்.. வியந்து போன வானதி.. அசத்தல் -
1988ல் "மக்கள் ஆணையிட்டால்" படத்தில்! விஜயகாந்துக்காக ஸ்டாலின் பாடிய பாடல் இதுதான்! -
கொத்தாக காலியாகும் டெபாசிட்.. தவெக விஜய்க்கு பெரிய சிக்கல்.. 3 பெரிய சர்வேவில் இருக்கும் வார்னிங்! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
ராஜ்யசபா எம்பி சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி! ஆதாரத்தை காட்டி பிரேமலதா விமர்சனம் -
திமுக கூட்டணியின் 'பவர் மேக்னட்' ஆன பிரேமலதா.. ஸ்டாலினின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. என்ன நடந்தது? -
“எங்கள் கைதியாக இருப்பதே உங்க பையனுக்கு பாதுகாப்பு!” அமெரிக்க விமானியின் தாய்க்கு ஈரான் மெசேஜ் -
அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு! -
Tata: டாடா அறக்கட்டளையிலிருந்து விலகினார் "டிவிஎஸ்" வேணு சீனிவாசன்! பின்னணி என்ன? -
"ஒரு நிமிடம் 2 டிரோன்கள்.." அமெரிக்க உளவு துறை அலுவலகத்தை காலி செய்த ஈரான்! உச்சக்கட்ட பதற்றம்












Click it and Unblock the Notifications