பிரதமர் மோடி முன்னாடி.. சாம் ஆல்ட்மென் செய்த செயல்! மொத்த டெக் உலகமும் ஷாக்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற டெல்லி ஏஐ மாநாட்டில் ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட் மேன் செய்த செயல் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகின்றன.
'இந்தியா AI இம்பாக்ட் சமிட் 2026' எனும் தலைப்பில் ஏஐ மாநாடு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு தொடர்பான செய்திகள் சமீபத்தில் சோஷியல் மீடீயாக்களில் பரவலாக ஷேராக வருகிறது.

இப்படி இருக்கையில், இந்த மாநாட்டில் ஓபன்ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் செய்த செயல் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த மாநாட்டில் சுந்தர் பிச்சை, சாம் ஆல்ட்மேன், ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் டேரியோ அமோடி உள்ளிட்ட பல டெக் ஜாம்பவான்கள் பங்கேற்றிருந்தனர். இவர்களுடன் பிரதமர் மோடி பாரத் மண்டபத்தில் ஒன்றாக சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்த நிகழ்வின்போது அனைவரும் கைகோர்த்து, கைகளை உயர்த்தி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ஆனால், டேரியோ அமோடி மற்றும் சாம் ஆல்ட்மேன் குலுக்க மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மோடியும் மேடையில் இருந்த அந்நேரம், இருவரும் இப்படி கை குலுக்காமல் இருந்தது, ஏஐ உலகில் இவர்கள் இருவருக்கம் இடையே நீடித்து வரும் நீண்டகாலமாக பஞ்சாயத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
மேடையில் அருகருகே நின்று கொண்டிருந்த இருவரும் சற்றே சங்கடமாகத் தெரிந்தனர். பிரதமர் மற்றும் பிற தலைவர்களின் வேண்டுகோளையும் மீறி, அவர்கள் கை கோர்க்கத் தயங்கினர். ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்குப் பதிலாக, தங்கள் முஷ்டிகளை உயர்த்தி சங்கிலியை உடைப்பது போலச் செயல்பட்டனர். இத்தருணம் கேமராவில் பதிவாகி பெரும் கவனத்தைப் பெற்றது.
இக்காட்சி, AI உலகில் இந்தியா முக்கியப் பங்காற்ற பிரதமர் மோடி முயற்சிக்கும் நிலையில், அதன் யதார்த்தங்கள் எவ்வளவு சிக்கலானவை என்பதை உணர்த்தியது. ஆல்ட்மேன்-அமோடி கை குலுக்க மறுத்தது, AI உலகம் ஆழமாகப் பிளவுபட்டுள்ளதையே தெளிவாகப் பிரதிபலித்தது.
இவர் இருவரும் கைகோர்க்க மறுத்ததற்கு காரணம் இருக்கிறது. ஆரம்பத்தில் டேரியோ ஓபன்ஏஐ நிறுவனத்தில் துணை தலைவராக வேலை செய்து வந்தார். அப்போது இவருக்கு மேலதிகாரியாக சாம் ஆல்ட்மேன் இருந்தார். இப்படி பணியாற்றியபோது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. சாம் ஆல்ட்மேன் ஓபன்ஏஐ நிறுவனத்தை வணிகரீதியாகவும் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்காமலும் வளர்த்து வருகிறார் என டேரியோ குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதனையடுத்து இருவருக்கும் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, ஓபன் ஏஐ நிறுவனத்திலிருந்து டேரியோ பிரிந்து வந்து ஆந்த்ரோபிக் நிறுவனத்தை தொடங்கினார். டெக் உலகில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இப்படி இருக்கையில்தான் இருவரும் கைகோர்க்க மறுத்துள்ளனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications