சனாதன தர்மம் அவமதிக்கப்பட்டு இருக்கு.. ராகுல், உத்தவ் அமைதியா இருக்காங்க.. கிளறி விடும் பாஜக
டெல்லி: சனாதன தர்மத்தை அவமதிக்கும் முயற்சிகள் நடைபெற்று இருப்பதாகவும் ஆனால் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சிவசேனா (யுபிடி) உத்தவ் தாக்கரே இது பற்றி எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். எனவே, இந்த மாநாட்டுக்கு மிக பொருத்தமாக சனாதன தர்மம் ஒழிப்பு என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சை திரித்து பாஜகவினர் பரப்பிய நிலையில் இது பற்றி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பேச்சு தொடர்பாக ஒட்டு மொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும்.
நான் சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, Genocide என நான் சொன்னதாக பைத்தியக்காரத்தனமாக சிலர் பேசுகிறார்கள். சனாதனம் கோட்பாடு ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். வேண்டுமென்று பாஜகவினர் போலி செய்தி பரப்புகின்றார்கள். இந்தியா கூட்டணி கூட்டம் வெற்றியடைந்ததை திசைதிருப்பவே பாஜகவினர் இப்படி செய்கின்றனர்" என்றார்.
இருந்தாலும் பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதியின் பேச்சை வைத்து தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்து தனிப்பட்ட கருத்து எனக் கூறி விலகிக் கொண்டது. குறிப்பாக மம்தா பானர்ஜி கூட சனாதன தர்மத்தை மதிப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் ஜூனியர் என்பதால் அவருக்கு இது தெரியவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாரிசில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி , தான் கீதை மற்றும் உபநிடதங்களை வாசித்து இருப்பதாகவும் பாஜக சொல்வது போல எதுவும் இந்து மதத்தில் இல்லை என்றும் கூறினார். இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அனுராக் தாகூர் கூறியதாவது:- சனாதன தர்மம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ராகுல் காந்தியும் உத்தவ் தாக்கரவேவும் அமைதியாக இருக்கிறார்கள். அதிகார பேராசையால் உத்தவ் தாக்கரே தற்போது இப்படி செய்து கொண்டு இருக்கிறார். பலரும் சனதான தர்மம் பற்றி பலரும் சொல்லிவிட்ட நிலையில் ராகுலும், உத்தவ் தாக்கரேவும் எதுவும் சொல்லவில்லை" என்றார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications