பாக். டூ ரியாத் டூ டெல்லி.. இந்தியாவின் எதிர்ப்பால் யூ டர்ன் போட்டு டெல்லி வரும் சவுதி இளவரசர்
Recommended Video

டெல்லி: சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான், இரு நாட்கள், அரசு முறைப் பயணமாக, இன்று டெல்லி வருகை தருகிறார்.
முகமது பின் சல்மான், பாகிஸ்தானில் இரு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், இஸ்லாமாபாத்திலிருந்து ரியாத் சென்று, அங்கிருந்து இன்று தனது அமைச்சர்களுடன் டெல்லி வருகை தருகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இளவரசர் முகமது பின் சல்மான், நாளை சந்தித்து இரு நாட்டு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சை கருத்து
முன்னதாக, பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபிய நாடுகள் இணைந்து நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில், இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சிறப்பாக முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாராட்டு வழங்கப்பட்டிருந்தது. காஷ்மீரில் இந்திய சிஆர்பிஎப் படைவீரர்கள் 40 பேர் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதலில் பலியான நிலையில் சவுதி இளவரசரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

யூ டர்ன்
காஷ்மீர் தாக்குதல் நடந்துள்ள நிலையில், பாகிஸ்தானிலிருந்து நேரடியாக இந்தியாவிற்கு விமானத்தில் இளவரசர் வருகை தர இந்தியா அதிருப்தி வெளிப்படுத்தியது. எனவே ரியாத் சென்ற முகமது பின் சல்மான், அங்கேயிருந்து டெல்லி வருகிறார். இந்தியா வரும் முகமது பின் சல்மானுடன், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் இரு நாடுகள் நடுவேயான வர்த்தக மேம்பாடு குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒத்துழைப்பு
சவுதி அரேபியாவின் ஸ்டாட்டர்ஜிக் கூட்டாளி நாடுகள் மொத்தம் 8 ஆகும். அதில் இந்தியாவும் ஒன்று. இந்த நாடுகளுடன் உறவை பலப்படுத்துவது முகமது பின் சல்மான் வருகையின் நோக்கம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். இந்தியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளும் ஸ்டாட்டர்ஜிக் கூட்டுறவு கவுன்சில் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கடற்படை அளவில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்.

ரியாத் சென்ற மோடி
2016ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ரியாத் சென்று வர்த்தகம், முதலீடு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் கூட்டுறவை அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications