Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கின் விசாரணையை கண்காணிக்க நீதிபதியை நியமித்தது உச்சநீதிமன்றம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் 4 விவசாயிகள் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கண்காணிக்க பஞ்சாப்-ஹரியானா நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ் குமார் ஜெயின் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக ஓரண்டாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் இதுவரை 800க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

லக்கிம்பூர் போராட்டம்

லக்கிம்பூர் போராட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரிலும் கடந்த அக்டோபர் 3-ந் தேதி மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது உ.பி. துணை முதல்வர் மவுரியாவுக்கு கறுப்புக் கொடி காட்டும் வகையில் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது சொகுசு கார் ஒன்று கூட்டத்துக்குள் திட்டமிட்டு ஏற்றப்பட்டது.

விவசாயிகள் படுகொலை

விவசாயிகள் படுகொலை

இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் மொத்தம் 8 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

அதிருப்தியால் நடவடிக்கை

அதிருப்தியால் நடவடிக்கை

உச்சநீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பின்னரே மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்ளிட்ட பலரையும் உ.பி. போலீசார் கைது செய்தது. ஆனாலும் உ.பி. போலீசார் இந்த வழக்கு விசாரணையை ம் இகவும் தாமதப்படுத்துவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அத்துடன் தற்போதைய விசாரணை அதிகாரிகள் அனைவரும் இன்ஸ்பெக்டர்கள் நிலையில் உள்ளனர்; இவர்களுக்கு பதிலாக அதிகாரிகளை நியமிக்கவும் அறிவுறுத்தியது உச்சநீதிமன்றம்.

நீதிபதி நியமனம்

நீதிபதி நியமனம்

அத்துடன் இவ் வழக்கின் விசாரணையை கண்காணிக்க நீதிபதி ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இன்றைய விசாரணையின் போது லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கின் விசாரணையை கண்காணிக்க பஞ்சாப்-ஹரியானாவின் ஓய்வு பெற்ற நீதிபதி ராகேஷ்குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த திங்கள்கிழமையன்று இந்த வழக்கை 3 ஐபிஎஸ் அதிகாரிகள் குழு விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இந்த 3 ஐபிஎஸ் அதிகாரிகள் நடத்தும் விசாரணையை கண்காணிக்கவே தற்போது ஓய்வு பெற்ற நீதிபதியை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+