கோவில்கள் குறித்த விமர்சனம்- பிரதமர் மோடியிடம் கேளுங்க.. காளிகாம்பாள் கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக கோவில்களை அரசு கைப்பற்றி இருப்பதாக பிரதமர் விமர்சித்திருந்தால் பிரதமரிடம்தான் கேட்க வேண்டும் என சென்னை காளிகாம்பாள் கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம் மனுதாரர்களுக்கு குட்டு வைத்தது.

சென்னை காளிகாம்பாள் கோவில் நிர்வாக குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

SC comments on PM Modi remarks on control of Hindu temples in Tamil Nadu

இன்றைய விசாரணையின் போது தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, கடவுள் நம்பிக்கை எனக்கும் உண்டு. ஆனால் ஒரு பிரிவினரே கோவில்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது சரி அல்ல. கோவிலுடைய நிர்வாகமும் வழிபாட்டு சுதந்திரமும் பரவலாக்கப்படுவதுதான் சரியானதாகவும் இருக்கும்.

கோவில்கள் என்பவை பிராமணர்களுக்கு மட்டுமே உரியதும் அல்ல. பிராமணர் அல்லாத பிற ஜாதியினர் பலரும் ஆகச் சிறந்த சமயம், மதம் சார்ந்த படைப்புகளை வழங்கி உள்ளனர். பிராமணர் அல்லாத வால்மீகிதான் ராமாயணம் படைத்தார். கோவில்கள் பொதுவானவை. ஒரே ஒரு ஜாதியின் பிடியில்தான் இருக்க வேண்டும் என்பதை உடைத்து எறிய வேண்டியதும் அவசியம் என வாதிட்டார்.

SC comments on PM Modi remarks on control of Hindu temples in Tamil Nadu

இந்த விசாரணையின் போது, தமிழ்நாட்டில் கோவில்களை அரசாங்கமே கைப்பற்றி வைத்திருக்கிறது என பிரதமர் மோடியே விமர்சித்திருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதில் அதிருப்தி அடைந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அப்படியானால் அந்த கருத்து பற்றி பிரதமர் மோடியிடம்தானே கேட்க வேண்டும் என பதிலடி கொடுத்து குட்டும் வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+