புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு!
டெல்லி: புதிய நாடாளுமன்றக் கட்டடம் உள்பட சென்ட்ரல் விஸ்டா நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி கொடுத்துள்ளது. தூசி பரவலைத் தடுக்க கருவிகளை பொருத்த நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு டிசம்பர் 10-ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். 2022ஆம் ஆண்டில் 971 கோடி ரூபாய் செலவில் இதன் கட்டுமான பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய முக்கோண நாடாளுமன்றக் கட்டடம் 900 முதல் 1200 எம்பிக்கள் வரை அமரும் திறன் கொண்டது. இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்டவைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் 5-ஆ்ம தேதி வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது. எனினும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட டிசம்பர் 7இல் அனுமதி அளித்தது. இதையடுத்து அந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பை கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா அடங்கிய பெஞ்ச் இன்று வழங்கியது. அப்போது அவர்கள் புதிய நாடாளுமன்றக் கட்டடம் உள்பட சென்ட்ரல் விஸ்டா நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி அளித்தனர்.
மேலும் தூசி பரவலைத் தடுக்க கருவிகளை பொருத்த நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். அத்துடன் நாடாளுமன்றம் கட்டி முடிக்கப்பட்ட பின்னர் மத்திய கூடத்திலும் தூசி பரவலை தடுக்க கருவி பொருத்தவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பில் இரு நீதிபதிகள் அனுமதி அளிக்கலாம் என்றும் ஒரு நீதிபதி எதிர்மறையாகவும் தீர்ப்பளித்தார். நீதிபதிகள் கான்வில்கர் மற்றும் மகேஸ்வரி நில பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை உறுதிப்படுத்தினர். ஆனால் மற்றொரு நீதிபதியான சஞ்சீவ் கன்னா மத்திய விஸ்டா திட்டத்திற்கான நில பயன்பாட்டில் மாற்றம் செய்தது மோசமானது என தெரிவித்தார்.
-
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications