எச்.எல்.தத்துவை அன்று கடுப்பாக்கிய ராகுல் காந்தி குடியுரிமை விவகாரம்.. ஒரு பிளாஷ்பேக்
டெல்லி: ராகுல் குடியுரிமை பிரச்சனை இப்ப மட்டுமில்ல ஏற்கனவேயும் ஒரு முறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடியாகியுள்ளது.
ராகுல் காந்தி இங்கிலாந்திலும் குடியுரிமை பெற்றுள்ளார். ஆகவே அவர் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இப்படி உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தள்ளுபடி செய்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடதக்கது.

ராகுல் காந்தி 2005 மற்றும் 2006-ம் ஆண்டு இங்கிலாந்தின் பேக்காப்ஸ் நிறுவனத்தில் ஆண்டு வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்தபோது இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளார். அவரை இந்த குடியுரிமை குறித்து நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்றும் அவரை இந்த மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்றும் கேட்டு டெல்லியைச் சேர்ந்த ஜெய் பகவான் கோயல், சந்தர் பிரகாஷ் தியாகி ஆகியோரும் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனு உரிய ஆதாரங்கள் இல்லையென்று கூறி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. 2015 ம் ஆண்டும் இதுபோல ஒரு சம்பவம் நடைபெற்றது. வழக்கறிஞர் எம்.எல் சர்மா என்பவர் ராகுல் காந்திக்கு இங்கிலாந்திலும் குடியுரிமை உள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு அப்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ஹெச்.எல்.தத்து, மற்றும் நீதிபதி அமித்தவ ராய் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தாக்கல் செய்த வழக்கறிஞரை பார்த்து "நீங்கள் தாக்கல் செய்த மனு அற்பமானது. எந்தவித சம்பந்தமும் இல்லாத விசாரணைகளைத் தொடங்குவதற்காக வழக்கு தொடர்ந்துள்ளீர்கள். தனி மனிதர்களுக்கு எதிராகவோ, அல்லது அமைப்புகளுக்கு எதிராகவோ பொதுநல மனு இருத்தல் கூடாது, ஒரு பொதுநலமனு நல்ல நிர்வாகத்தின் மூலம் மனிதர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் ஊடகமாக இருக்க வேண்டும். நீங்கள் தாக்கல் செய்த மனுவுக்கான ஆதாரங்கள், மனுவில் இணைந்துள்ள ஆவணங்களின் மூலத்தைக் கேள்விக்குள்ளாகுகிறது. பொதுநல மனு சிறிது உணர்வுபூர்வமாக மக்களை துன்பத்தில் இருந்து மீட்பதாக இருக்க வேண்டும்" என்று காட்டமாக கூறினர்,
இருந்தாலும் வழக்கறிஞர் சர்மா இந்த மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார். இதைக் கேட்ட எரிச்சல் அடைந்த தலைமை நீதிபதி ஹெச்எல் தத்து, "நிறுத்துங்கள், நான் இன்னும் 2 நாட்கள் மட்டுமே பணியில் இருப்பேன். என்னைத் தேவையில்லாமல் மிகப்பெரிய அபராதத்தை உங்கள் மீது விதிக்கத் தூண்டாதீர்கள்" என்று கூறினார். பின்னர் டிசம்பர் 2-ம் தேதி தலைமை நீதிபதி ஹெச்எல் தத்து ஓய்வு பெற்றார்.
இப்போது மீண்டும் அதே பிரச்னையை கையில் எடுத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தால் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications