7 நாள்தான் டைம்.. விளக்கம் கொடுங்கள்.. காஷ்மீர் வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!
ஜம்மு காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு7 நாளில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு7 நாளில் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரம் நீக்கப்படுவதற்கு முதல்நாள் இரவு அங்கு இணையம் துண்டிக்கப்பட்டது. அதன்பின் போன் இணைப்பு கேபிள் இணைப்பு எல்லாம் துண்டிக்கப்பட்டது. மொத்தமாக காஷ்மீரில் இருந்து இந்தியாவும், இந்தியாவில் இருந்து காஷ்மீரும் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் காஷ்மீரில் இப்போதும் தொடர்ந்து கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. அங்கு இன்னும் இணைய இணைப்பு செய்து கொடுக்கப்படவில்லை. லேண்ட் லைன் போன் இணைப்பு மட்டும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் ராணுவமும் அதிக அளவில் குவிக்கப்பட்டு நிறைய கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது. அங்கு செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கவும் அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நிறைய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
காஷ்மீரை சேர்ந்த செய்தியாளர் அனுராதா பாஸின் மற்றும் தேசியவாத காங்கிரஸ் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அதிக கவனம் பெற்றது. இந்த மனுவில் காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடுகள் அதிர்ச்சி அளிக்கிறது. அங்கு கட்டுப்பாடுகளை அகற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்ஏ நசீர் மற்றும் எஸ்ஏ போட்பே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. அதன்பின் அவர்கள் முக்கியமான உத்தரவை பிறப்பித்தனர்.

அதில், காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நிலவுவது ஏன்?.ஒருவரை மற்றொருவர் சந்திப்பதில் என்ன தவறு. இந்திய குடிமகன்கள் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும், பாதை அமைத்துக் கொடுப்பது அரசின் கடமை.
காஷ்மீர் மக்களுடன் இந்தியாவின் பிற பகுதி மக்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். இந்தியாவின் பிறபகுதி மக்களுடன் காஷ்மீர் மக்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும்.
இதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதில் எந்த தவறும் இருக்க கூடாது, காஷ்மீரில் நிலவும் கட்டுப்பாடு குறித்து மத்திய அரசு7 நாளில் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்!












Click it and Unblock the Notifications