மோடி மீது விமர்சனம்-பத்திரிகையாளர் வினோத் துவா மீதான பாஜகவின் தேச துரோக வழக்கு ரத்து- உச்சநீதிமன்றம்
டெல்லி: மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீதான தேசதுரோக வழக்கை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்துள்ளது.
மூத்த பத்திரிகையாளரான வினோத் துவா கடந்த ஆண்டு, யூ டியூப் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பிரதமர் மோடி குறித்து விமர்சனங்களை வினோத் துவே முன்வைத்திருந்தார்.

இதனையடுத்து பிரதமர் மோடி, பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் மரணங்களை வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்துவதாக வினோத் துவா அவதூறாக பேசியுள்ளார். ஆகையால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இமாச்சல பிரதேசத்தின் பாஜக பிரமுகர் அஜய் ஷ்யாம் போலீசில் புகார் கொடுத்தார்.
இதனடிப்படையில் வினோத் துவா மீது இமாச்சல பிரதேச போலீசார் தேசதுரோக வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வினோத் துவா மனுத் தாக்கல் செய்தார்.
இவ்வழக்கில் வினோத் துவாவை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் யு.யு. லலித், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. கடந்த அக்டோபர் மாதம் இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வினோத் துவா மீதான தேசதுரோக வழக்கை அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.
கேதார்நாத்சிங் வழக்கு தீர்ப்பின் கீழ் பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு
மேலும் அரசுகள் மீதான விமர்சனங்களே தேசவிரோத குற்றங்கள் ஆகாது என்ற கேதார்நாத்சிங் வழக்கின் தீர்ப்பு அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பொருந்தும் என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். 1962-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கேதார் நாத்சிங் வழக்கில் வழங்கிய தீர்ப்பில், தேசத்துக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையிலான விமர்சனங்கள், வன்முறைக்கு ஆதரவு தெரிவிக்கும் கருத்துகள் ஆகியவைதான் தேசதுரோக சட்டத்தின் கீழ் வரும். அப்படி எதுவும் இல்லாதவை தேசதுரோக சட்டத்தின் கீழ் வராது என குறிப்பிட்டிருந்தது.
இதனைத்தான் இன்று வினோத் துவா வழக்கிலும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். மேலும் உச்சநீதிமன்றத்தில் வினோத் துவா முன்வைத்த மற்றொரு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். அதாவது கடந்த 10 ஆண்டுகளில் பல மாநிலங்களில் பத்திரிகையாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் தொடர்பாக ஆராய ஒரு வல்லுநர் குழுவை அமைக்க வேண்டும் என்பது வினோத் துவா கோரிக்கை. இதனை மட்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர்.
-
நெல் சாகுபடி வரலாறு காணாத உயர்வு.. கொள்முதலை ‘டபுள்’ மடங்கு ஆக்கக் கோரி பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் -
இந்திய கப்பல்களுக்கு அனுமதி? ஈரான் அதிபருக்கு போன் போட்ட மோடி! பிரச்சனை தீருமா! -
"கொரோனா டைம் போல.." ஒரு நொடி யோசித்து பிரதமர் சொன்ன வார்த்தை.. எல்பிஜி சிக்கல் அவ்வளவு மோசமா? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம்












Click it and Unblock the Notifications