முட்டி மோதியும் ம்ஹூம்- எஸ்.பி.வேலுமணி மீதான 'டெண்டர்' வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு!
டெல்லி: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் விசாரணை அறிக்கையை வேலுமணிக்கு வழங்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
அதிமுக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர் எஸ்.பி.வேலுமணி. அப்போது அரசு ஒப்பந்தங்களை உறவினர்கள் உள்ளிட்டோருக்கு முறைகேடாக வழங்கினார் என்பது வழக்கு. அறப்போர் இயக்கம், திமுக உள்ளிட்டவை சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். மேலும் எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டிருந்தது.
இவ்வழக்கில் 10 வாரங்களில் முழுமையாக விசாரணை நடத்தி இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு செய்தார்.
மேலும் தம் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்ய வேண்டும்; இது தொடர்பான விசாரணை அறிக்கையை தமக்கு தர வேண்டும் என்றும் அம்மனுவில் எஸ்.பி.வேலுமணி கூறியிருந்தார். இம்மனு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது.
இந்த விசாரணையின் போது, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க தடை இல்லை என உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து நடத்தலாம் என்றும் வழக்கு விசாரணை அறிக்கை நகலை வேலுமணிக்கு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications