ராஜினாமா செய்த கர்நாடகா அதிருப்தி எம்.எல்.ஏக்களை சட்டசபைக்கு அழைப்பது எப்படி சரி? முகுல் ரோத்தகி
டெல்லி: கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை கொறடா உத்தரவின் அடிப்படையில் சட்டசபைக்கு வரவழைப்பது சரியல்ல என மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார்.
கர்நாடகாவில் ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசுக்கு எதிராக 16 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்தனர். ஆனால் எம்.எல்.ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்கவில்லை.
ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் முடிவு செய்திருக்கிறார். இதனை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சார்பாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார், அவரது வாதம்:

ராஜினாமா ஏற்காமல் இழுத்தடிப்பு
உமேஷ் யாதவ் எம்.எல்.ஏ. ராஜினாமாவை மார்ச் 20-ந் தேதி சபாநாயகர் ஏற்றுக் கொண்டார். அதேபோல இந்த எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவையும் சபாநாயகர் ஏற்க வேண்டும்.

உரிமையை பறிக்க கூடாது
எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று சொல்லவில்லை. அதை சபாநாயகர் செய்யலாம். நான் எம்.எல்.ஏ.வாகவே இருக்க விரும்பவில்லை என்கிறார் ஒருவர். அது தமது உரிமை என்கிறார். அந்த உரிமையை சபாநாயகர் பறிப்பது எப்படி சரியாகும்?

கட்டாயப்படுத்துவது ஏன்?
தகுதி நீக்கத்தை எதிர்த்து எத்தனை எம்.எல்.ஏக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர் என கணக்குப் பார்த்தாலே கர்நாடகா அரசு வீட்டுக்குத்தான் போக வேண்டும். நான் எம்.எல்.ஏவாக இருக்கவே விரும்பாத போது நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கொறடா உத்தரவை மதித்து சட்டசபைக்கு ஏன் செல்ல வேண்டும்? என வாதிட்டார் முகுல் ரோத்தகி.

2-வது நோட்டீஸ்
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை எதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என கேள்வி எழுப்பினார். இதனை அடுத்து வாதத்தை தொடர்ந்த முகுல் ரோத்தகி, ஏற்கனவே தகுதி நீக்க விளக்கம் கோரி அனுப்பப்பட்ட நோட்டீஸ் விவகாரம் முடிவுக்கு வரவில்லை. இப்போது 2-வது முறையாக மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விரைந்து முடிவெடுக்க வேண்டும்
ராஜினாமா கடிதங்களை ஏற்காமல் தகுதி நீக்கம் செய்வது சரியானது அல்ல. அரசியல் சாசனத்தின் 190-வது பிரிவின் கீழ் எம்.எல்.ஏ.வின் ராஜினாமா கடிதம் கொடுக்கப்பட்டால் அதன் மீது விரைவாக முடிவெடுக்க வேண்டும். அந்த ராஜினா முடிவை தாமதப்படுத்தக் கூடாது.

தகுதி நீக்கம் என்பது இதுதான்
ஒரு எம்.எல்.ஏ. இன்னொரு கட்சிக்கு தாவும்போதுதான் தகுதி நீக்கம் செய்ய முடியும். ஒரு எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டால் இடைத்தேர்தலுக்காக அவர் காத்திருக்கவும் வேண்டும். ஊடகங்களில் நாங்கள் ராஜினமா செய்துவிட்டேன் என கதறுகின்றனர். அதன்பின்னரும் அவர்கள் எம்.எல்.ஏக்கள் என சொல்வது வேதனை தருகிறது. ஆகையால் ராஜினாமாக்கள் மீது சபாநாயகர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications