உ.பி.: லக்னோ உட்பட 5 நகரங்களில் முழு லாக்டவுன் இல்லை- ஹைகோர்ட் உத்தரவை நிறுத்தி வைத்த சுப்ரீம்கோர்ட்
டெல்லி: உத்தரப்பிரதேசத்தின் லக்னோ உட்பட 5 நகரங்களில் முழு லாக்டவுனை அமல்படுத்த வேண்டும் என்ற அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் லக்னோ, கான்பூர், கோரக்பூர், வாரணாசி மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய நகரங்களில் முழு லாக்டவுனை அமல்படுத்த வேண்டும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உத்தரப்பிரதேச அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் முன்பு இந்த வழக்கை உடனே விசாரிக்க வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வலியுறுத்தினார். இதனை ஏற்று விசாரித்த தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச், அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
கோவிட் போராளிகள் காப்பீடு - கை தட்டிய அரசே கை விரிக்கலாமா..? -சு.வெங்கடேசன் MP சுளீர் கேள்வி
மேலும் இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.