ஜல்லிக்கட்டு நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைத்ததற்கு எதிராக வழக்கு- உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
டெல்லி: தமிழகத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாவை முறையாக நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கு எதிராக தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இவ்வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் சரித்திர புரட்சியை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகள் சுமூகமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு அவனியாபுரத்தில் நாளையும் பாலமேட்டில் நாளை மறுநாளும் அலங்காநல்லூரில் 17-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஜல்லிக்கட்டு காளைகள் முன்பதிவு, காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள் முன்பதிவு, கேலரிகள் அமைத்தல், பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதிய வழக்கு
இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான குழுக்களையும் மதுரை மாவட்ட ஆட்சியர் அமைத்திருந்தார். ஆனால் மாவட்ட ஆட்சியர் அமைத்த குழுவில் அனைத்து ஜாதியினரையும் சேர்க்க வேண்டும்; அருந்ததியினரை குழு உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

நீதிமன்றம் உத்தரவு
இவ்வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் கொண்ட பெஞ்ச், ஜல்லிக்கட்டுக்கான குழுக்கள் தொடர்பான விரிவான உத்தரவுகளை பிறப்பித்தது. ஜல்லிக்கட்டு குழுக்களை ஒருங்கிணைக்கும் தலைவராக நீதிபதி மாணிக்கம் நியமிக்கப்பட்டார்.

வழிகாட்டுதல்கள்
மேலும் ஜல்லிக்கட்டு காளைகள், உரிமையாளர்கள் என யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது; தற்போதைய குழுக்கள் அனைத்தும் தற்காலிகமானதுதான்; விலங்குகள் நல வாரிய விதிகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. ஒருங்கிணைப்பு குழுக்களின் கீழ் அறிவுரைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வழங்கப்பட்டன.

பாலமேடு குழு
பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை மட்டும் மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி நடத்தலாம்; அதே நேரத்தில் நீதிபதி மாணிக்கம் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்காணிக்கும். என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

குழுக்களுக்கு எதிராக வழக்கு
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு குழுக்களை அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஏ.கே. கண்ணன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டை தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் நடத்தி வந்த நிலையில் நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது ஏற்புடையது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications