சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம்- நிலம் கையகப்படுத்த ஹைகோர்ட் விதித்த தடை தொடரும்: உச்சநீதிமன்றம்
டெல்லி: சென்னை- சேலம் இடையேயான 8 வழி நெடுஞ்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
Recommended Video

சென்னை- சேலம் இடையே ரூ10,000 கோடி மதிப்பீட்டில் 277.3 கிமீ தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த சாலையானது சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்களின் வழியே அமைக்க முடிவு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணியும் நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
ஆனால் இத்திட்டத்துக்காக விளைநிலங்கள், நீர் நிலைகள், மலைகளை அழிக்கும் ஆபத்து உள்ளதாக விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

ஹைகோர்ட் தடை
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி சென்னை-சேலம் 8வழி சாலை திட்டத்துக்கு தடை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசும் இந்திய நெடுஞ்சாலை துறையும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
உச்சநீதிமன்றத்தில் முதலில் இந்த வழக்கை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. நீதிபதி அருண் மிஸ்ரா ஓய்வு பெற்ற நிலையில் நீதிபதிகள் கான்வில்கர், பிஆர் கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்து அக்டோபர் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

தடை நீடிக்கும்- உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இந்த வழக்கில் இன்று நீதிபதி கான்வில்கர் தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பளித்தது. அத்தீர்ப்பில், சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை உறுதி செய்யப்பட்டது; மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தடைக்கு எதிரான அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது.

திட்டத்துக்கு தடை இல்லை
அதேநேரத்தில் சென்னை- சேலம் 8 வழி சாலை திட்டத்துக்கு தடையில்லை என்றும் புதிய அரசாணை வெளியிடவும் தேவையான சுற்றுச் சூழல் அனுமதி பெறவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய அறிவிக்கை மூலமே நிலங்களை வகை படுத்த முடியும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications