ராஜீவ் காந்தி உயிருக்கு ஆபத்து.. படுகொலைக்கு முன் எச்சரித்த இஸ்ரேல் உளவுத்துறை - எக்ஸ்பர்ட் தகவல்
டெல்லி: 1991ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் தான் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து இருப்பது தொடர்பான டிரான்ஸ்கிரிப்டுகளை இஸ்ரேல் உளவுத்துறை பகிர்ந்து கொண்டதாகவும், ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு அது காணாமல் போனதாகவும் நமித் வர்மா பரபரப்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ராஜீவ் காந்தி உயிரிழந்தார்.
இந்நிலையில் தான் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான முக்கியமான விஷயத்தை பாதுகாப்பு நிபுணராக அறியப்படும் நமித் வர்மா கூறியுள்ளார்.

நமித் வர்மா பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை கொள்கையின் பல்வேறு முக்கிய விஷயங்களில் அரசுடன் நெருக்கமாக செயல்பட்ட அனுபவம் கொண்டவர். இந்நிலையில் தான் உசனாஸ் பவுண்டேஷன் சார்பில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு மத்தியிலான உளவுத்துறை ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் நமித் வர்மா பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
முன்னாள் பிரமதர் ராஜீவ் காந்தி கடந்த 1991ல் படுகொலை செய்யப்பட்டார். ஆனால் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என சில டிரான்ஸ்கிரிப்ட் தகவல்களை இஸ்ரேல் உளவுத்துறை இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது. 30 - 40 ஆண்டுகளாக தகவல்கள் பரிமாறப்பட்டது. ஆனால் 1991ல் ராஜீவ் படுகொலைக்கு பிறகு டிரான்ஸ்கிரிப்டுகள் மாயமாகின.
ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு மாற்றம் நிகழ தொடங்கியது. அரசியல் மாற்றத்தால் நிலைமை மாறிப்போனது. முன்பு ஒவ்வொரு நாடுகளும் தினமும் மற்ற நாடுகளுக்காகவும் வேலை செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அமைதியை ஏற்படுத்தும் உளவுத்துறையின் தகவல் பகிர்ந்து தொடர்பான குறிப்பிட்ட பகுதி நீக்கப்பட்டது அல்லது ஏதாவது மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம். மேலும் டிரான்ஸ்கிரிப்ட்டின் மற்றொரு நகலை நாங்கள் பெற விரும்பினோம். ஆனால் இஸ்ரேல் வழங்கவில்லை.
டிரான்ஸ்கிரிப்ட் தகவலின்படி பணம் செலுத்தப்பட்டுள்ளத. ‛காட்மேன்' சார்பில் பணம் செலுத்தப்பட்டதாக கூறியது. இதை விட வெளிப்படைத்தன்மை என்ன இருக்க முடியும. இவை அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டது. மேலும் ஒவ்வொரு நாடுகள் இடையேயும் உளவுத்துறை தகவல்களை பகிர்ந்து கொள்வதில் அரசியல் என்பது பெரும் பங்கு உள்ளது.
டிரான்ஸ்கிரிப்ட்டின் மற்றொரு நகலை கேட்டபோது இஸ்ரேல் அதனை வழங்கவில்லை. ஒவ்வொரு நாடுகள் இடையே உளவுத்துறை தகவல்கள் பகிர்ந்து கொள்வதில் அரசியல் எப்படி விளையாடுகிறது என்பதற்கு இது சிறந்த உதாரணமாகும்.
ஏனென்றால் அந்த சமயத்தில் சோவியத் யூனியன் பிளவுப்படவில்லை. அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் எதிரெதிராக இருந்தாலும் கூட இருநாடுகளுக்கும் பாலமாக இருந்தவர் ராஜீவ் காந்தி. இதனால் முக்கியத்துவம் இருந்தது. ஆனால் அதன்பிறகு நிலைமை மாறியது'' என்றார்.
இந்த நிகழ்ச்சியில் இஸ்ரேலை சேர்ந்த ஜோசப் ரோசன் மற்றும் கோபி மைக்கேல் ஆகியோர் பங்கேற்றனர். இவர் இஸ்ரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தில் துணை இயக்குனர் மற்றும் பாலஸ்தீனிய பிரிவின் தலைவராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications