கொரோனா-மத்திய அரசு அலட்சியம் என விமர்சனம்- வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல் வல்லுநர் குழுவில் இருந்து விலகல்
டெல்லி: கொரோனா பரவல் விவகாரத்தில் மத்திய அரசு அலட்சியமாக நடந்து கொண்டதாக விமர்சித்த சீனியர் வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல், மத்திய அரசின் வல்லுநர் குழுவில் (Indian SARS-CoV-2 Genome Sequencing Consortia- INSACOG) இருந்து விலகி உள்ளார்.
சீனியர் வைரலாஜிஸ்ட் ஷாகித் ஜமீல் அண்மையில் இந்தியாவின் கொரோனா நிலைமை குறித்து விவரித்திருந்தார். அதில், கொரோனா முதல் அலையை ஒப்பிடுகையில் 2-வது அலையின் தொடக்கமே அதிக பாதிப்புகளை கொண்டதாக இருக்கிறது.

ஒருநாள் கொரோனா பாதிப்பு 96,000 அல்லது 97,000 என்ற நிலையில் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் 4 லட்சத்தில் இருந்து 2-வது அலை தொடங்குகிறது. இதனால் கொரோனா 2-வது அலை தாக்கம் ஜூலை மாதம் வரை நீடிக்கலாம்.
மேலும் இந்தியாவின் கொரோனா புள்ளி விவரங்கள் தவறாகவும் உள்ளன. கடந்த டிசம்பர் மாதத்தில் கொரோனா தாக்கம் குறைந்தது. இதனையடுத்து கொரோனா அச்சமின்றி மிகப் பெரிய அளவில் ஒன்று கூடினார்கள். இதுதான் கொரோனா 2-வது அலை உக்கிரமாக இருப்பதற்கு காரணம்.
குறிப்பாக தேர்தல் பிரசாரங்கள், மத ஒன்றுகூடல்கள் போன்றவை கொரோனா 2-வது அலைக்கு காரணம். அதேபோல் கொரோனா தடுப்பூசி போடுவதிலும் தொய்வு இருக்கிறது என கூறியிருந்தார் ஷாகித் ஜமீல். இந்த நிலையில் மத்திய அரசின் வல்லுநர் குழுவில் இருந்து அவர் விலகி உள்ளார்.
Recommended Video
இருப்பினும் தாம் வல்லுநர் குழுவில் இருந்து விலகியத்ற்கான விரிவான காரணத்தை ஷாகித் ஜமீல் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு அமைத்த INSACOG வல்லுநர் குழுவானது, உருமாறிய பல்வேறு வகை கொரோனா வைரஸ்கள் குறித்து ஆராய உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பூடானில் 5.6 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்! அலறியடித்து ஓடிய மக்கள்.. இந்தியா, சீனாவிலும் அதிர்வுகள் -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல! -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications