முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்கள்.. டெல்லி கலவரத்திற்கு ஈரான் கடும் கண்டனம்.. பரபரப்பு திருப்பம்!

முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்களை இந்தியா வளர விட கூடாது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப் டெல்லி கலவரம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்களை இந்தியா வளர விட கூடாது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப் டெல்லி கலவரம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி கலவரம் நடந்து முடிந்து 4 நாட்கள் ஆகியும் அதன் பாதிப்பு இன்னும் தலைநகரில் போகவில்லை. டெல்லி கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி கலவரத்தில் 275 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த கலவரத்தில் காயம் அடைந்த பலர் டெல்லியில் பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

என்ன

என்ன

இந்த நிலையில் டெல்லி கலவரம் குறித்து தற்போது உலக நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக கவலை தெரிவிக்கவும், கண்டனம் தெரிவிக்கவும் தொடங்கி உள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஷெரிப் இது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வரிசையாக கட்டவிழ்த்து விடப்படும் திட்டமிடப்பட்ட வன்முறைகளை ஈரான் கண்டிக்கிறது.

இந்தியா ஈரான்

இந்தியா ஈரான்

பல நூறு வருடங்களாக இந்தியாவும், ஈரானும் நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள். இந்தியா அரசும் அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கும் எல்லோரும் நன்றாக இருக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். முக்கியமாக முட்டாள்தனமான அறிவற்ற குண்டர்களை வளர விட கூடாது, என்று மிகவும் கடுமையாக சாடி இருக்கிறார். இதில் அனைத்து இந்தியர்கள் என்ற வார்த்தையில் அனைத்து என்பதை (ALL) என்று பெரிய வார்த்தைகளில் எழுதி உள்ளார்.

டெல்லி கலவரம்

டெல்லி கலவரம்

இந்தியா மீது டெல்லி கலவரம் தொடர்பாக முதல்முறை ஒரு நாடு நேரடியாக கண்டனம் தெரிவித்துள்ளது. கண்டனம் என்ற வார்த்தையை நேரடியாக ஈரான் பயன்படுத்தி இருக்கிறது. உலக நாடுகள் முழுக்க இவரின் கண்டனம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இவர் முட்டாள்தனமான குண்டர்கள் என்று குறிப்பிட்டு இருப்பதும் உலகம் முழுக்க பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் தலைவர்

ஈரான் தலைவர்

இதற்கு முன்னர் ஈரான் தலைவர் அயோதல்லா காமேனேய் இதேபோல் இந்தியாவின் காஷ்மீர் கொள்கைகளை விமர்சித்து இருந்தார். காஷ்மீரில் இந்தியா கொடுமையை செய்து வருகிறது என்று குறிப்பிட்டார். ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி இதேபோல், காஷ்மீர் வன்முறைகளை, பாவப்பட்ட மக்களை கொல்வதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று 370 சட்ட பிரிவு நீக்கப்பட்ட நேரத்தில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது இந்தியா ஈரான் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+