கொரோனா பாதிப்பு உயர்வு.. தேவை தனி மருத்துவமனைகள்.. அடுத்த கட்டத்திற்கு வேகமாக நகருமா இந்தியா?
டெல்லி: கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்துக் கொண்டு செல்வதால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரத்தியேக மருத்துவமனையை ஏற்படுத்துவதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
Recommended Video
இதுவரை, பொது மருத்துவமனைகளில், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைத்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, இவ்வாறு பிற நோயாளிகளுக்கு மத்தியில், கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது நோய் பரவுதலை அதிகரித்து விடும் அபாயம் இருக்கிறது.

சீனாவில் இதே போன்ற நிலை ஏற்பட்டபோது, பத்தே நாளில் ஒரு மருத்துவமனையை இந்த சிகிச்சைக்காக கட்டி அசத்தியது அந்த நாட்டு அரசு. ஆனால், நம்மவர்கள் இன்னும் அந்த மாதிரி யோசனைக்கே வந்த மாதிரி தெரியவில்லை. முடிவெடுத்தாலும், அவ்வளவு வேகமாக செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி. அதேநேரம் ஏற்கனவே இருக்கக்கூடிய மருத்துவமனையை, இதற்காக பிரத்யேகமாக மாற்றக் கூடியதுதான் நம்மிடம் உள்ள உடனடி வாய்ப்பு.
இந்த நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பார்கவா அளித்த பேட்டியில், ஒவ்வொரு மாநில அரசும் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக தனியாக ஒரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும், அல்லது ஒரு மருத்துவமனையை இதற்காக பிரத்யேகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்திய அரசு இந்த விஷயத்தில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டாக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. துரிதமாக முடிவெடுத்தால் அடுத்த கட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக மாறினால்தான் பேரழிவுகளை நம்மால் சமாளிக்க முடியும்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications