நிறைய நோ பால்.. தேவையில்லாத ஸ்டிரோக்.. நழுவ விட்ட கேட்ச்சுகள்.. பாஜகவை டபாய்த்த சசிதரூர்!
டெல்லி: பாஜக அரசு கொண்டு வந்த பட்ஜெட்டை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் விமர்சனம் செய்துள்ளார்.
எந்த ஒரு விஷயத்தையும் விளையாட்டுடன் ஒப்பிட்டு பேசினால் அது எளிதில் ரீச்சாகும் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி போட்டிகள் நேற்றைய தினம் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி பட்ஜெட்டை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட் குறித்து ஆளும் கட்சியினர் ஆஹா ஓஹோ என பாராட்டி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சியோ அதில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டி வருகின்றனர்.

விவசாயிகள் தற்கொலை
அந்த வகையில் இதுகுறித்து திருவனந்தபுரம் எம்பி சசிதரூர் கூறுகையில், உணவை கொடுக்கும் நமது நாட்டின் விவசாயிகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இந்த பாஜக அரசால் நடத்தப்படுகின்றனர். இதனால் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

திரிசங்கு
நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையாற்றிய போது ஜிடிபி என்ற வார்த்தையை வெறும் இரு முறை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். எனவே இந்த பட்ஜெட் இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் திரிசங்கு நிலையில் உள்ளது.

அட்டகாசமான பவுண்டரி
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி தொடங்கியுள்ளது. அதுதான் தற்போதைக்கு நம் மனதில் பதிந்துள்ளது. இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக அரசின் முதல் பட்ஜெட் அட்டகாசமான பவுண்டரிகளை அடிக்கும் என எதிர்பார்த்தோம்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு
ஆனால் இந்த பட்ஜெட்டோ தேவையில்லாத ஸ்ட்ரோக்குகளும், விடுபட்ட கேட்சுகளும், கொஞ்சம் நோ பால்களும், வைட்களும் தான் இருந்தன. இந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்தும் தீர்வு காணப்படவில்லை.

சசிதரூர்
இந்திரா காந்திக்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது பெண்மணியாக மீண்டும் வரலாறு படைத்து விட்டார், நிர்மலா சீதாராமன். இதற்காக எனது கட்சி சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் என்றார் சசி தரூர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications