திரும்பி பார்த்த எம்பி சுப்ரியா.. பக்கத்தில் போய் பேசியது ஏன்? மீம்ஸ்களுக்கு சசி தரூர் பளீர் பதிலடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலேவுடன் நாடாளுமன்றத்தில் பேசியது என்ன என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.

உலகமும்.. சமுதாயமும் எவ்வளவு முன்னேற்றம் அடைந்தாலும் இன்னும் இந்தியாவில்
ஆணும் பெண்ணும் சகஜமாக பேசிக்கொள்வதை தவறாகவே பலரும் கருதி வருகிறார்கள்.
அதிலும் பொது வாழ்வில் இருப்பவர்கள் நட்பாக பேசிக்கொள்வதை கூட பலர் தவறான
கண்ணோட்டத்தில் பேசுவது உண்டு.

அப்படித்தான் காங்கிரஸ் எம்பி சசி தரூர் சகஜமாக பேசி ஒரு வீடியோ இணையம்
முழுக்க பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் எம்பி

காங்கிரஸ் எம்பி

காங்கிரஸ் எம்பி சசி தரூர் நேற்று முதல் நாள் லோக்சபாவில் இருக்கும் போது.. தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். சுப்ரியா சுலே பின்பக்கம் திரும்பி பேசிக்கொண்டு இருந்தார். அவர் முகத்திற்கு அருகே பெஞ்சில் முகத்தை வைத்து சசி தரூர் அவருக்கு பதில் தந்து கொண்டு இருந்தார். அப்போது ஜம்மு காஷ்மீர் தேசிய கான்பிரன்ஸ் எம்பி பரூக் அப்துல்லா அவையில் பேசிக்கொண்டு இருந்தார்.

 சசி தரூர்

சசி தரூர்

சுப்ரியா சுலே, சசி தரூர் இருவரும் இப்படி நெருக்கமாக பேசியது வீடியோவாக வெளியானது. பலர் இந்த வீடியோவையோ வெளியிட்டு கிண்டல் செய்து இருந்தனர். இரண்டு அரசியல் தலைவர்கள், அவையில் பேசிக்கொள்வது சகஜம். அவர்கள் ஆணோ, பெண்ணோ, அவையில் இரண்டு எம்பிக்கள் இப்படி பேசிக்கொள்வது எல்லாம் சாதாரண விஷயம். ஆனால் இதை வைத்து பலர் மீம் போட்டு இருந்தனர்.

சுப்ரியா சுலே

சுப்ரியா சுலே

முக்கியமாக நெட்டிசன்கள் பலர் புஷ்பா பட ஸ்ரீவள்ளி பாடலை வைத்து மீம்களை போட்டு இருந்தனர். சில நெட்டிசன்கள், மூத்த பத்திரிகையாளர்கள் கூட இதை விமர்சனம் செய்து இருந்தனர். இந்த நிலையில் இது தொடர்பான மீம்கள், சர்ச்சைகளுக்கு தற்போது சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார். அதில், மக்கள் சிலர் இப்படித்தான் பேசுவார்கள். அதுதான் அவர்களின் வேலை. நம் நாட்டில் சீதையே கேள்விக்கு உள்ளாக்கப்பட்டார்.

சசி தரூர் விளக்கம்

சசி தரூர் விளக்கம்

நானும், சுப்ரியா சுலேவும் பேசிக்கொண்டதை பகிர்ந்து பலர் காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள். அவையில் அவர் பாலிசி தொடர்பாக கேள்வி ஒன்றை கேட்க இருந்தார். அப்போது என்னிடம் அது தொடர்பாக சந்தேகம் கேட்டார். அடுத்து அவர்தான் கேள்வி கேட்க வேண்டும். அருகே பருக் அப்துல்லா அவையில் பேசிக்கொண்டு இருந்ததால் அவரை தொந்தரவு செய்ய கூடாது என்று அவர் அமைதியாக பேசினார். இதனால் நான் அவர் அருகே சென்று அவர் பேசுவதை கேட்டேன், என்று சசி தரூர் விளக்கம் அளித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+