Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஃபேஸ்புக் விவகாரம்- காங். சசி தரூர், பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பரஸ்பரம் உரிமை மீறல் புகார்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஃபேஸ்புக் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவும் பரஸ்பரம் உரிமை மீறல் புகார்களை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொடுத்திருக்கின்றனர்.

Recommended Video

    BJP- க்கு ஆதரவு.. Facebook மீது குவியும் விமர்சனங்கள்

    இந்தியாவில் வெறுப்பை தூண்டும் பதிவுகளை ஃபேஸ்புக் நிர்வாகம் கண்டுகொள்ளாமல் பக்க சார்புடன் நடந்து கொள்கிறது என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக நாடு முழுவதும் அனல்பறக்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    Shashi Tharoor, Nishikant Dubey file breach of privilege notices against each other on Facebook Row

    நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப துறைக்கான நிலைக்குழுவின் தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூ்ர், ஃபேஸ்புக் தொடர்பாக விசாரிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதனை பாரதிய ஜனதா கட்சி எம்பி நிஷிகாந்த் துபே விமர்சனம் செய்திருந்தார்.

    மேலும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஒப்புதல் எதனையும் பெறாமல் சசி தரூர் செயல்படுவதாகவும் நிஷிகாந்த் குற்றம்சாட்டி இருந்தார். இதனால் கோபம் அடைந்த சசி தரூர், நாடாளுமன்ற நிலைக்குழு தலைவரான என் அதிகாரம், உரிமையை மீறும் வகையில் நிஷிகாந்த் விமர்சித்திருப்பதால் அவர் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க கோரி சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் அனுப்பினார்.

    இதற்கு பதிலளித்துள்ள நிஷிகாந்த் துபே, நான் எப்போதும் உரிமை மீறல்களில் ஈடுபட்டது இல்லை; அதிகாரங்களை தவறாக பயன்படுத்தவும் அனுமதிக்கவும் போவதில்லை என்றார். அத்துடன் சசி தரூர் மீதும் உரிமை மீறல் புகாரை நிஷிகாந்த் துபே கொடுத்திருக்கிறார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+